!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2004/08 - 2004/09 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, August 31, 2004

புதுப் புதுப் போராட்டங்கள்

அண்ணாகண்ணன்


சென்னையில் தயாராகி, அமெரிக்காவில் வெளியாவது, தி தமிழ் டைம்ஸ் என்ற மாத இதழ். கவிஞர் ஜெயபாஸ்கரன், இதன் சிரியராகப் பொறுப்பேற்றுள்ளார். அவர் என்னிடம் கவிதை கொடுங்கள் என்றுதான் கேட்டார்( இவருக்காவது நான் கவிஞன் என்பது நினைவில் உள்ளதே!). அண்மையில் நடைபெற்ற விநோத போராட்டங்கள் என் மனத்தைக் கவர்ந்ததால் 'இதைப் பற்றி எழுதட்டுமா?' எனக் கேட்டேன். அஅமெரிக்க மக்களுக்கு இங்கு நடப்பவற்றைத் தெரிவிக்க, இது நல்ல வாய்ப்பு. இந்தக் கட்டுரையையே கொடுங்கள் அ என்றார். அது, இதோ:

போராட்டங்களால் உலகமே ட்டம் காணும் காலம், இது. கருப்பையினுள் நுழையும்இலட்சக்கணக்கான உயிரணுக்களுள் ஓர் அணுதான் கருவுறுகிறது. அதற்கே அந்த அணு, ஒரு போராட்டம் நடத்தவேண்டி இருக்கிறது. வெளியே வந்த பிறகும் குழந்தை,தன் ஒவ்வொரு கோரிக்கைக்கும் அழுது ர்ப்பாட்டம் செய்கிறது. தான் கேட்டது கிடைக்கும் வரை அது, கையை அசைத்து - காலை உதைத்து- படுத்துப் புரண்டு- வீரிட்டு அலறிப் பிடிவாதம் பிடிக்கிறது. தன் நோக்கம் நிறைவேறும் வரை யாரோடும் பேசாமல், எதையும் சாப்பிடாமல்- குடிக்காமல் சண்டித்தனம் செய்கிறது. கடைசியில் வேறு வழியில்லை என்று பெரியவர்கள்தாம் இறங்கி வரவேண்டி இருக்கிறது. இப்படி,குழந்தையின் குருதியிலேயே போராட்ட உணர்வு கலந்திருப்பதால் வளர்ந்த பிறகு யாரும் கற்றுக் கொடுக்காமலேயே மனிதன் போராடத் தொடங்குகிறான்.

இப்படி எல்லோரும் போராடும் போது போராட்டம் என்பதே சாதாரணமான ஒன்றாய்கிவிட்டது. ' எங்க த்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார் ' என்பது போல் ஒப்புக்கு நடக்கும் போராட்டங்கள் நாம் அறியாதவையா என்ன? தொடங்கும் இடத்தில்500 பேரும் முடியும் இடத்தில் 50 பேருமாகப் பேரணி நடப்பதால்தானே இடையில்கழன்றுவிடுவோரைத் தடுக்க, கண்காணிப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள்? 50 ரூபாயும் பிரியாணி பொட்டலமும் எனப் பேசி, ள் பிடித்து நடக்கும் பிரமாண்டப் பேரணிகளும்பொதுக்கூட்டங்களும் இந்த மண்ணுக்கு என்ன புதிதா? இவ்வாறு இல்லாமல் உண்மையாகநடந்தால் 36 அமைப்புகள் ஒருங்கிணைந்த குடையமைப்பில் 36 பேர்தானே இருப்பார்கள்?

ள் திரட்டி, படை பலம் காட்ட முடியாதவர்கள், வெவ்வேறு புதிய உத்திகளில்போராட்டங்களை அறிவிக்கிறார்கள். மற்றவர்களின் கவனத்தை உடனே திருப்புவது எப்படி என்பதே இந்தப் புதிய போராட்டக்காரர்களின் நோக்கம். ஒவ்வொருவருக்கும்ஒவ்வொரு விதமான கோரிக்கைகள். ஒவ்வொரு கோரிக்கைக்கும் வெவ்வேறு வகையானபோராட்டங்கள்.

கழுதையிடம் மனுகஸ்டு 12ம் தேதி, புதுவையில் கழுதையிடம் மனு அளிக்கும் போராட்டம் நடந்தது. புதுவை சாரத்தில் உள்ள நில அளவைப் பதிவேடுகள் துறை அலுவலகம் முன் இது நடந்தது. இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ர். விஸ்வநாதன், பட்டா வழங்கக் கோரி, கழுதையிடம் மனு அளித்தார். அதிகாரியிடம் மனு அளித்தும் பயன் இல்லை; அவர் காகிதத்தைத் தின்று விடுகிறார் என்பதைக் குறிப்பாக உணர்த்தியுள்ளார்கள்.

மதுக் கடைக்குப் பூட்டு அரசியல் கட்சிகளில் பாட்டாளி மக்கள் கட்சி, புதிய புதிய போராட்டங்களை அறிவிப்பதில் முன்னணியில் உள்ளது. மதுக் கடைகளை மூட வலியுறுத்தி, பிரசாரம் செய்யும் அக்கட்சி, மதுக் கடைகளுக்குப் பூட்டுப் போடும் போராட்டத்தை கஸ்டு 23ம் தேதி நடத்தியுள்ளனர். பா.ம.க. மகளிர் அணியினர், கிராமப்புறத்தில் உள்ள மதுக்கடைகளுக்குப் பூட்டுப் போடுவதான இப்போராட்டம் சாதுரியமானது. பெண்கள் தொடர்புடைய அனைத்தும் உணர்வெழுச்சியை(சென்டிமெண்ட்)த் தூண்டக் கூடியவை.

மணி அடிக்கும் போராட்டம்தமிழக அரசு, மக்கள் நலனைக் கவனிக்காமல் தூங்குகிறது; அதை எழுப்புவதற்காக என்று சொல்லி மணி அடிக்கும் போராட்டத்தைக் கடந்த மாதம் பா.ம.க. நடத்தியது. சென்னையில் தூய ஜார்ஜ் கோட்டைக்கு அருகில் அக்கட்சியினர் சிலர் மணி அடித்தனர்.

அஞ்சல் அட்டைப் போராட்டம்பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், தமிழ்நாடு முழுவதும் கஸ்டு 11 ம் தேதி, அஞ்சல் அட்டைப் போராட்டம் நடத்தினர். தங்களிடமிருந்து தவணை முறையில் பெற்ற தொகையை நிலம் வாங்கப் பயன்படுத்திய கூட்டுறவு சங்கத்தைக் கண்டித்தும் தங்கள் தொகையைப் பாதுகாக்க வேண்டியும் அஞ்சல் அட்டைகளை நிர்வாகிக்கு அனைத்து ஊழியர்களும் அனுப்பிவைத்தனர். சாதாரண அஞ்சல் அட்டை என்று எண்ணவேண்டாம். வல்லவனுக்குப் புல்லும் யுதம் என்பதை நிரூபிப்பதோடு போராட்டத்தில் அனைத்து ஊழியர்களையும் ஈடுபடச் செய்வதற்கு, இப்போராட்டம் உதவியுள்ளது.

சைக்கிள் பேரணிவிழுப்புரத்தில் காவல் துறை தடை உத்தரவு 30(2) நடைமுறையில் உள்ளதால் அங்கு பேரணிகள் நடத்தக் காவல் துறை அனுமதிக்கவில்லை. அதை மீறி, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட தி.மு.க.வினர் 300 பேர், கஸ்டு 10 அன்று சைக்கிள் பேரணி சென்றனர். தடையை மீறிச் சென்றதால் போக்குவரத்திற்குப் பெரும் இடையூறு ஏற்பட்டதாக 300 பேர் மீதும் காவல் துறையினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். மிதிவண்டியில் செல்வது, சாதாரணமானது என்றாலும் ஒரு நோக்கம் கருதிச் செல்வதும் கூட்டமாகச் செல்வதும் போராட்ட மதிப்பைப் பெறுகின்றன. இன்றும் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க, ஊழலை ஒழிக்க என ஏதேனும் காரணம் சொல்லி, நெடுந்தூர மிதிவண்டிப் பயணம் மேற்கொள்ளும் பலரை நம்மால் பார்க்க முடியும்.

தீக்குளிக்க முயற்சி
கோவை ட்சியாளர் அலுவலகத்தில் கஸ்டு 9ம் தேதி, காணாமல் போன தம் கணவரை மீட்டுத் தரக் கோரி, விஜயலெட்சுமி என்பவர் தீக்குளிக்க முயன்றார். அன்றைய நாள், அங்கு மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடந்துகொண்டிருந்தது. ங்காங்கே மக்கள் கூட்டம் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். அப்போது மனு கொடுக்க வந்த இவர், பையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் புட்டியை எடுத்து, உடலில் ஊற்றினார். மற்றவர்கள் பதற்றத்தோடு பார்க்கும் போதே தீப்பெட்டியை எடுத்து, குச்சியைக் கிழிக்கப் போனார். அங்கிருந்தவர்கள் ஓடிச் சென்று அதைத் தட்டிவிட்டனர். அவரின் மனுவைப் பெற்ற காவல் துறையினர், தற்கொலை முயற்சிக்காக விஜயலெட்சுமியைக் கைது செய்தனர். இது, தெளிவாக மற்றவர்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பும் ஒரு உத்தி தான். கைதான தலைவரை விடுவிக்க வேண்டும், தலைவர் மரணம் எனப் பல நேரங்களில் தீக்குளிப்பது, தமிழ்நாட்டில் சாதாரண ஒன்று. பிறகு, தீக்குளித்த தொண்டருக்கு உதவித் தொகை வழங்கும் அடுத்த காட்சியும் அரங்கேறும்.

உள்ளிருப்புப் போராட்டம்கல்வி, வணிக மயமாவதைத் தடுக்கக் கோரி, அனைத்துக் கல்லூரி மாணவர்கள், பள்ளிக் கல்வி இயக்ககம் முன் கடந்த மாதம் போராட்டம் நடத்தினர். சாதாரணமாகக் கூடி நின்று குரலெழுப்பும் போராட்டம் தான் அது. அப்போது காவல் துறையினர், மாணவர்கள் சிலரைத் தாக்கினர். இதைத் தொடர்ந்து, மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்துப் பற்பல கல்லூரிகளின் மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். கஸ்டு 13ம் தேதி, இராணி மேரி மகளிர் கல்லூரி மாணவியர்கள், உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். அரசையும் காவல் துறையையும் கண்டித்து, தங்கள் வளாகத்திற்கு உள்ளேயே உட்கார்ந்து, உரக்கக் குரல் எழுப்பினர். பெண்கள், பொதுவாக இத்தகைய போராட்டங்களையே தேர்ந்தெடுப்பார்கள். இதுதான் அவர்களுக்குப் பாதுகாப்பானது.

நிர்வாணப் போராட்டம்னால், உக்கிரமமான சூழ்நிலையில் பெண்கள், புலியென மாறி விடுவார்கள் என்பதற்கு மணிப்பூர் பெண்களே சான்று. ஜூலை 10ம் தேதி இரவு மணிப்பூரில் மனோரமாதேவி என்ற 32 வயதுப் பெண், இந்திய இராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகி, கொல்லப்பட்டு, தூக்கி வீசப்பட்டார். இரவு நேரத்தில் வந்து இக்கொடூர செயலைச் செய்ததற்கு, இராணுவம் சொன்ன காரணம், மனோரமா, தீவிரவாத இயக்கம் ஒன்றின் கமாண்டோ என்பதே. இராணுவத்திற்குக் கேள்வி முறை இல்லாமல் அதிகாரம் வழங்கும் யுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும் எனப் பெண்கள் அமைப்பினர் உள்பட, மணிப்பூர் மாநிலம் முழுதும் போராட்டத்தில் குதித்துள்ளது. இதன் ஒரு கட்டமாக, பெண்கள், ஜூலை 15 அன்று , நிர்வாணப் போராட்டம் நடத்தினர். உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் அசாம் ரைபிள்ஸ் அலுவலகம் முன்பு, பத்திற்கும் மேலான பெண்கள், கூக்குரல் எழுப்பினர். ' இந்திய இராணுவமே, எங்கள் சதைகளை எடுத்துக்கொள்; மனோரமாக்களை விட்டுவிடு ' , ' இந்திய இராணுவமே, எங்களைக் கற்பழி ' என்றெல்லாம் எழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் தமக்கு முன்பாகப் பிடித்திருந்தனர்.

கூண்டோடு விடுப்பு மணிப்பூரில் நிர்வாணப் போராட்டம் தவிர, ஏராளமான போராட்டங்கள் நடந்துள்ளன. இதே கோரிக்கையை வலியுறுத்தி, அரசு ஊழியர் அனைவரும் கூண்டோடு விடுப்பு எடுத்துள்ளனர். வெகு சிலரைத் தவிர, பெரும்பாலான ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை. இதனால் அரசு எந்திரம் முழுதும் ஸ்தம்பித்துவிட்டது.

தீப்பந்த ஊர்வலம்மக்களின் தீவிரப் போராட்டத்தால் இம்பால் நகராட்சிப் பகுதியில் மட்டும் யுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்குவதாக அரசு அறிவித்தது. இதனால் நிறைவடையாத மக்கள், மணிப்பூர் மாநிலம் முழுதிலிருந்தும் இச்சட்டத்தை நீக்க வலியுறுத்தி, கஸ்டு 12ம் தேதி இரவு, தீப்பந்த ஊர்வலம் நடத்தினர்.

மனிதச் சங்கிலிகஸ்டு 15ம் தேதி அன்று, மனோரமா நிகழ்வையொட்டி 32 அமைப்புகள் இணைந்து , மாநிலம் முழுதும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தின.

பாச விளம்பரங்களைக் கண்டித்து, சென்னை புரசைவாக்கத்தில் மாணவ- மாணவியரின் மனிதச் சங்கிலிப் போராட்டம், கஸ்டு 10ம் தேதி நடந்தது. இதில் புரசை எம்.சி.டி. முத்தையா செட்டியார் ண்கள் , பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவியர் பங்கேற்றனர். வேறு சில அமைப்பினரும் இதில் கலந்துகொண்டனர். ஒருவரோடு ஒருவர் கைகொடுத்து, இதை எதிர்க்கிறோம் எனக் குறிப்பாக உணர்த்துவதற்கு மனிதச் சங்கிலி உதவும். ட்கள் குறைவாக இருந்தாலும் அதிகமானோர் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தைக் காட்டுவதற்கு இது, சிறந்த உத்தி.

கூண்டுக்குள் அமர்ந்து ர்ப்பாட்டம்இப்படி, பெரிய பெரிய கோரிக்கைகளுக்காகத்தான் போராட்டம் நடக்க வேண்டுமா, என்ன! தென்கொரியாவில் நாய்க்கறி தின்பதற்கு எதிராகக் கடந்த மாதம், சோங்னாம் நகரில் ஒரு பேரணி நடந்தது. அதில் நாய்களை அடைத்து வைக்கும் கூண்டு ஒன்றிற்குள் ர்ப்பாட்டக்காரர் ஒருவர் அமர்ந்துகொண்டார். நாய் போன்ற முகமூடி ஒன்றையும் அணிந்துகொண்டார். நாய்களையும் இப்படித்தான் அடைத்து வைக்கிறீர்கள் என்பதை அவர் குறிப்பாக உணர்த்தினார்.

சிறை நிரப்பும் போராட்டம்ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சிபுசோரனை விடுதலை செய்யக் கோரி, அக்கட்சித் தொண்டர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜார்க்கண்ட் தலைநகர் இராஞ்சியில் கஸ்டு 7 ம் தேதி, இது நடந்தது. கட்சிக் கொடிகள், பதாகைகள், கட்சியின் சின்னமான வில்- அம்பு கியவற்றோடு தொண்டர்கள் கைதாயினர். இத்தகைய போராட்டம், தமிழ்நாட்டில் பல முறைகள் நடந்துள்ளன.

நடைப் பயணம்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ, நெல்லை முதல் சென்னை வரை 42 நாளில் 1,025 கி.மீ. தூரம் நடந்து வருகிறார். கஸ்டு 5ம் தேதி நெல்லையில் தொடங்கிய இது, செப். 15 அன்று சென்னையில் முடிகிறது. நதிநீர் இணைப்பு, காவிரிச் சிக்கலில் தமிழக நலனைப் பாதுகாத்தல், பொது வாழ்வில் சீர்கேடு நீக்குதல், சாதி- மத உணர்வுகளைத் தடுத்தல், வன்முறை மனப்பாங்கை இளைஞர்கள் கைவிடுதல் கியவற்றோடு அ.தி.மு.க. ட்சியை எதிர்த்தல் கிய நோக்கங்களுக்காக இந்த நடைப் பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார். ஏராளமான நடைப்பயணங்கள் , தமிழகத்திலும் வெளியிலும் நடைபெற்றுள்ளன. ஒரு புதிய தொடக்கத்திற்கு அடையாளமாக, குத்துவிளக்கு ஏற்றுவோர், பலர். வைகோ, தாம் புறப்படும் முன் வேப்பமரக் கன்றை நட்டார்.

உடல் முழுதும் நாமம் சரிவர ஊதியம் கொடுக்கவில்லை , நீதி கிடைக்கவில்லை என்போர், உடல் முழுதும் நாமம் போட்டுக்கொண்டு தெருவில் ஊர்வலம் வந்துள்ளனர். ஏமாற்றிவிட்டார் என்பதை நெற்றியில் நாமம் போட்டுவிட்டார் எனச் சொல்வோம். அதனைச் சிலர், நடைமுறையில் காட்டியுள்ளனர்.

வாயில் கருப்புத் துணி கட்டிப் போராட்டம்பேச்சுச் சுதந்திரத்திற்குக் கட்டுப்பாடு உள்ளது, கருத்துரிமை மறுக்கப்படுகிறது என்போர், வாயில் கருப்புத் துணி கட்டிப் போராட்டம் நடத்துவதுண்டு. பொதுவாக, எதிர்ப்புக் காட்ட, கருப்புக் கொடி ர்ப்பாட்டம் நடக்கும். இன்னும் சிலர், சட்டையில் கருப்புக் கொடியைக் குத்திக்கொண்டு பணியாற்றுவதுண்டு.

தற்கொலை மிரட்டல்தன் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி, உயர்ந்த கட்டடம், மரம், தொலைபேசி அலைக் கோபுரம்..போன்றவற்றில் ஏறி நின்று, குதித்துவிடப் போவதாக மிரட்டுவது. பொதுவாக, இவர்கள் கொஞ்ச நேரம் அலைக்கழித்து விட்டுக் கீழே இறங்கிவிடுவர். முன்னேறிய நாடுகளில், இவர்கள் மிரட்டத் தொடங்கிய உடனேயே சுற்றிலும் வலையை விரித்து விடுவார்கள். இந்தியாவில் ஏறியோர், தாமாக இறங்கினால்தான் உண்டு.

தண்டவாளத்தில் தலை டால்மியாபுரத்திற்குக் கல்லக்குடி எனப் பெயர் மாற்ற வேண்டும் எனக் கோரி, தி.மு.க.வினர், ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குழு குழுவாகச் சென்று தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தனர். மு.கருணநிதி, இந்தப் போராட்டத்தின் மூலம் முக்கிய தலைவர்களுள் ஒருவராகிவிட்டார்.

பலகையைத் தார் பூசி அழி1967 இந்தி எதிர்ப்புக் காலக்கட்டத்தில் இந்தி எழுத்துகள் அடங்கிய பெயர்ப் பலகைகளைத் தார் பூசி அழித்தனர். இத்தகைய போராட்டத்தை ஓரிரு ண்டுகளுக்கு முன் பா.ம.க.வினர் மீண்டும் நடத்தினர். சுவரொட்டிகளின் மீது சாணி அடித்ததன் தொடர்ச்சியே இது.

விதவிதமான கோரிக்கைகளுக்காக, விதவிதமான போராட்டங்கள் நடப்பது, உலகெங்கும் வழக்கம்தான். இந்தப் போராட்டங்களைப் பொதுவாக இரு வகைகளாகப் பிரிக்கலாம். அவை: அரசு அல்லது சமூகம், செய்யச் சொல்வதைச் செய்யாதிருப்பது; செய்யக் கூடாதென்பதைச் செய்வது. முன்னதற்கு, வேலை நிறுத்தம், வரிசெலுத்தாமை, வாக்களிக்காமை , கடையடைப்பு, ஒத்துழையாமை போன்றவை நல்ல எடுத்துக்காட்டுகள். பின்னதற்கு, சட்ட நகல் எரிப்பு, நிர்வாண ஓட்டம், கொலை, கொள்ளை, ரெயில் கவிழ்ப்பு...போன்றவை சான்றுகளாகும்.

எதற்காகப் போராடுகிறோம் என்பதை விட, எப்படிப் போராடுகிறோம் என்பதே முக்கியம். இதையே இத்தகைய விநோத போராட்டங்கள், அடிக்கோடு போட்டு அறிவிக்கின்றன.

Monday, August 09, 2004

வீர தீரச் சிறுவர்கள் - 8

மூழ்கியவனைக் காப்பாற்றிய சத்தியம்

அண்ணாகண்ணன்

பூமி முக்கால் பாகம் தண்ணீரால் சூழப்பட்டிருந்தாலும் மனிதனுக்குத் தண்ணீரைக் கண்டால் ஓர் அச்சம் இருக்கத்தான் செய்கிறது. தண்ணீரில் கண்டம் எனச் சோதிடர் சிலர் அச்சுறுத்தி விடுவதால் பலர், கிணறு, குளம், குட்டை, ஏரி, கடல் என எந்தத் தண்ணீரிலும் கால் வைப்பதில்லை. கொஞ்சம் தொட்டு, தலையில் தெளித்துக்கொள்வதோடு சரி.

நான் திருவாரூரில் பள்ளிக்கூட மாணவனாக இருந்தபோது எங்கள் பள்ளிக்கு எதிரே கமலாலயம் என்ற பெரிய குளம் இருக்கும். ஆண்டுதோறும் தெப்பத் திருவிழா, வெகு கோலாகலமாக நடக்கும். குளத்தின் நடுவில் ஒரு கோயிலும் உண்டு. கரையிலிருந்து அந்தக் கோயிலுக்கு ஒரு கம்பி கட்டி, அதைப் பிடித்தபடி போகும் பரிசல் பயணமும் உண்டு. நான் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவனாகையால், முடிந்தபோது வந்து என் அம்மா, என்னைப் பார்த்துவிட்டுப் போவார். ஒருமுறை அவர் வந்தபோது, ஒரு செய்தியைக் கேள்விப்பட்டு அதிர்ந்தார். அவர் வந்த நாளுக்கு முதல் நாள்தான் அந்தத் தெப்பக் குளத்தில் குளித்த இரண்டு மாணவர்கள், ஆழத்திற்குப் போய் மூச்சுத் திணறி இறந்துபோயிருந்தார்கள். உடனே அவர் என்னிடம் ஓர் உறுதிமொழி கேட்டார். இனிமேல் விடுதியின் குளியலறையில்தான் குளிக்க வேண்டுமேயொழிய கமலாலயத்திற்குப் போய்க் குளிக்கக் கூடாது என்றார். ஏனென்றால் எனக்கு நீச்சல் தெரியாது. நானும் ஒப்புக்கொண்டேன். நீச்சல், ஒவ்வொருவரும் கற்கவேண்டிய இன்றியமையாத கலை என்பதை அன்றே உணர்ந்தேன்.

ஒருமுறை , என் 15ஆம் வயதில், விடுமுறையின் போது என் சித்தப்பாவின் வீட்டிற்குச் சென்றேன். அது, ஆடுதுறைக்கு அருகில் திருமங்கலக்குடி என்ற சிற்றூர். அங்கிருந்து 2 கி. மீ. தொலைவில் காவிரியின் கிளை ஆறு ஓடிக்கொண்டிருந்தது. சித்தப்பா வீட்டில் எருமை மாடுகள் வளர்த்தார். அவற்றைப் பெரும்பாலும் வீட்டிலேயே குளிப்பாட்டி விடுவோம். சில நேரங்களில் ஆற்றுக்கு ஓட்டிச் சென்று குளிப்பாட்டுவதும் உண்டு. அப்படி ஒரு நாள் ஆற்றுக்குக் குளிக்கக் கிளம்பினோம். மாடுகளை வேறொரு பணியாளர் ஓட்டிக்கொண்டு வர, நானும் தம்பி பாலாஜி(சித்தி பையன்)யும் காவிரிக்குப் போனோம். அவன் என்னை விட இரண்டு வயது சிறியவன். கொண்டுபோன மாற்றுத் துணி, சோப்பு டப்பா, துண்டு எல்லாவற்றையும் படித்துறையில் வைத்தோம். எங்கள் ஆடைகளைக் களைந்து அதனருகில் போட்டுவிட்டு ஜட்டியோடு தண்ணீரில் இறங்கினோம்.

அப்போது(ம்) ஆற்றில் தண்ணீர் ஓட்டமில்லை. நான் இறங்கி, பல அடிகள் நடந்து பார்த்தேன். கழுத்து மட்டும்தான் தண்ணீர் இருந்தது. எனவே அச்சமின்றி , அங்குமிங்கும் நகர்ந்தேன். நீச்சல் அடிக்கிறேன் பேர்வழி என்று கை, கால்களை அடித்து , உதைத்து, உந்தித் தள்ளினாலும் உடம்பு என்னவோ தண்ணீருக்குள் இறங்கிக்கொண்டே இருக்கும். (என் அப்பா, தண்ணீரில் ஒரு கட்டையைப் போல் மிதப்பதைப் பார்த்திருக்கிறேன்.) இது சரிவராது என்று கரைக்கருகிலேயே தொளையம் அடித்துக்கொண்டிருந்தேன். சோப்பு போட்டுக்கொண்டு மீண்டும் தண்ணீரில் இறங்கினோம். கரையிலிருந்து அப்படியே பாய்வதெல்லாம் முடியாது. ஏனெனில் படித்துறை, கன்னா பின்னாவென்று சிதிலமடைந்து செங்கல்லும் கருங்கல்லும் பதம் பார்க்கக் காத்திருக்கும்.

தம்பி, குளித்து முடித்து விட்டு கரையேறித் துவட்டிக்கொண்டிருந்தான். நான் கரையோரம் மெல்ல நகர்ந்தேன். சமதளமாய்த்தான் இருந்தது. திடீரென ஒரு பெரிய பள்ளம். உள்ளே போய்விட்டேன். தரையை உந்தித் தள்ளி , மேலே வந்து கையைப் பெரிதாக ஆட்டிவிட்டு மீண்டும் உள்ளே போனேன். நான் இரண்டாம் முறை மேலே வந்தபோது தம்பி என்னைப் பார்த்துவிட்டான். சட்டென்று தண்ணீரில் இறங்கி, மேலே வந்த கையைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்தான். நல்ல வேளையாக நான் மேட்டுக்கு வந்துவிட்டேன். அதற்குள் கொஞ்சம் தண்ணீரைக் குடித்திருந்தேன். கண்கள் சிவந்து போயின. ஆனால், ஒரே நிமிடத்தில் பாலாஜி பார்த்துவிட்டதால் பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை. இதை வீட்டில் சொன்னால் அடுத்த முறை காவிரிக்கு அனுப்பமாட்டார்கள் என்பதால் வீட்டில் மறைத்துவிட்டோம். ஆனால் அந்தப் பாலாஜியின் உதவியை மறக்க முடியாது. தண்ணீர் வறண்டபோது ஆற்றிலும் மற்ற காலங்களில் கரையிலும் மணற்கொள்ளை அடிப்போர், அதனால் ஏற்படும் பள்ளங்களில் தண்ணீர் ஓடும் காலத்தில் அப்பாவிகள் பலர் சிக்கிக்கொள்வதை உணர்ந்தாவது திருந்தவேண்டும்.

இது , பழைய கதை. இப்போது 2003ஆம் ஆண்டு சூன் 21 அன்று நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பற்றித் தெரியுமா? ஏழு வயதுச் சிறுவன், ஐந்து வயதுச் சிறுவனைக் காப்பாற்றியது எப்படி?

மும்பை அய்ரோலி பகுதியில் இராதிகாபாய் மெகே சூனியர் வித்தியாலயாவில் இரண்டாம் வகுப்புப் படிப்பவன், சத்தியம் மகேந்திர காண்டேகர். சத்தியத்தின் அப்பா மகேந்திரா, அய்ரோலியில் உள்ள ஸ்ரீராம் பாலிடெக்னிக்கில் முதுநிலை விரிவுரையாளர். அம்மா, டாக்டர் சுஜாதா காண்டேகர். அப்பகுதியில் உள்ள இராஜேஷ் ஹெல்த் கிளப்பில் ஒரு நீச்சல் குளமும் இருந்தது. சத்தியம், தம் தந்தையுடன் தினமும் அங்கு சென்று நீச்சல் பழகுவது வழக்கம். தன் பயிற்சி முடிந்த பிறகு சத்தியம், கரையோரம் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தான். அப்போது ஒரு சிறுவன் , மூழ்குவதைச் சத்தியம் கண்டான். உடனே நீச்சல் குளத்தினுள் தாவினான். அதன் பிறகு என்ன நடந்தது? சத்தியமே சொல்கிறான்.

" நான் அந்தச் சிறுவனை நெருங்கிய போது, அந்தச் சிறுவன் விறைப்பாகி விட்டிருந்தான். தனியொருவனாக அவனைக் கரைக்கு இழுத்து வருவது கடினம் என்பதை உணர்ந்தேன். எனவே உதவிக்காகக் கூக்குரலிட்டேன். அப்போது என் அப்பா, எங்களைப் பார்த்துவிட்டார். அவர் உடனே எங்களைக் கரையை நோக்கி இழுத்தார். நாங்கள் ஒரு வழியாக மேலேறினோம். "

ஆனால், அந்த 5 வயதுச் சிறுவன் விஜய் சுவாமி, ஆபத்தான நிலையில் இருந்தான். அதிகத் தண்ணீரைக் குடித்திருந்தான். மகேந்திரா, அச்சிறுவனை அங்கிருந்த ஒரு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். ஆனால் , அவர்கள் ' இது , காவல் துறையின் வழக்கு. நாங்கள் பார்க்க முடியாது' என்றனர். அடுத்து அவர், சிறுவனை, தானேயில் உள்ள கல்வா நகராட்சி மருத்துவமனையில் சேர்த்தார். நல்லவேளையாகச் சிறுவன் பிழைத்துவிட்டான்.

நீச்சல் குளத்திற்குப் பொறுப்பான ஆசிரியர் ஒருவர் உண்டு. விஜய் தன் பயிற்சி நேரம் முடிந்த பிறகு குளத்திற்குள் இறங்கியதால் உடனே யாரும் கவனிக்கவில்லை என நீச்சல் குளத்தினர் கூறியுள்ளனர். பிறகு அவர்களே சத்தியத்தைப் பாராட்டவும் செய்தனர். நவு மும்பை மேயர், மாநில அமைச்சர்கள், காவல் துறை ஆணையாளர் ஆகியோர் , சத்தியத்தைப் பாராட்டி விருது வழங்கியுள்ளனர். கடந்த ஆகஸ்டு 15 ஆம் தேதி, புது தில்லியில் சத்தியத்திற்குத் தேசிய தீரச் செயல் விருது வழங்கிக் கெளவித்தனர்.

சத்தியத்தைப் போன்று இளம் வயதிலேயே நீச்சல் பயில வேண்டும். சமயோசிதமும் விவேகமும் சிக்கலை உடனே எதிர்கொள்ளும் ஆற்றலும் வளர வேண்டும் . நீச்சல் பயிலுவது, வாழ்வில் எதிர் நீச்சல் போடப் பெரிதும் உதவும்.




வீர தீரச் சிறுவர்கள் - 7

மாமனிதரே ரியாஸ்(9)!

அண்ணா கண்ணன்

தகவல் தொடர்பின் பிரமாண்டமான வளர்ச்சியால் உலகம் ஒரு சிற்றூராகச் சுருங்கிவிட்டது . உலகம் மட்டுமன்று ; மனித மனங்களும் மிகவும் சுருங்கிவிட்டன. அடுத்தவர்களுக்கு உதவுவது, அதுவும் பிரதிபலன் பார்க்காமல் உதவுவது, மிக அரிதாகிவிட்டது. நம்மிடம் இருக்கும் மிகச் சாதாரண பொருட்களைத் தருவதற்கே நாம் எவ்வளவு யோசிக்கிறோம்! நம்மிடம் உதவி நாடி வந்தவரிடம், விளக்கு வைத்த பிறகு கொடுக்கக்கூடாது, செவ்வாய் - வெள்ளிக் கிழமைகளில் தரக்கூடாது , ராகு காலம் - எமகண்டத்தில் முடியாது ......எனப் பெரியவர்கள் சொல்லியிருப்பதாக மரபு மூட்டையை அவிழ்த்துக் கடை விரிக்கிறோம். நமது சாலையோரம் நீளும் எண்ணற்ற கரங்களை நெற்றிக்கண் திறந்து சிடுசிடுப்போடு புறந்தள்ளுகிறோம். தெரு முனையில் வரும் ' அம்மா தாயே ' என்ற அழைப்பு, நம் வீட்டை எட்டும் முன் நம் கதவுகளையும் ஜன்னல்களையும் அவசரமாக மூடுகிறோம். பாதையெங்கிலும் அடிக்கடி நடக்கும் விபத்துகளை சுவாரஸ்யமாக வேடிக்கை பார்க்கலாமே தவிர, அதில் மூக்கை நுழைத்து , ஆபத்தை விலைக்கு வாங்கலாமோ!

நமது சமூகத்தின் சிந்தனை இப்படியாய் இருக்க, வலியப் போய் உதவும் மனிதர்களை, அழிந்துவரும் உயிரினங்களுள் சேர்க்கவேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டுள்ளது. இவர்களுள் தமக்குப் பொருளிழப்பு ஏற்பட்டாலும் உதவுவோர், இன்னும் ஒரு படி மேல். இவர்களுள்ளும் தம் உயிருக்கே ஆபத்து என்ற நிலையில் உதவுவோர், நமது வணக்கத்திற்கு உரியவர்கள். அவர்களால்தான் இன்னும் இந்தப் பூமியில் மழை பெய்கிறது. அந்த மிக அரிய மனிதர்களுள் ஒருவர், ரியாஸ் அகமது.

ஒன்பது வயதே நிறைந்த ரியாசை நாம் ' அவர் ' என அழைப்பதே பொருந்தும். ஏன்? அந்த வீர நிகழ்வைக் கொஞ்சம் சிந்திப்போம்.

2003 ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் நாள். உத்திரபிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவைச் சேர்ந்த ரிக்ஷா தொழிலாளி ஒருவரின் மகன் ரியாஸ், தம் நண்பர்களுடன் ரெயில் தண்டவாளங்களின் மீது நடந்துவந்துகொண்டிருந்தார். நிம்பூ பூங்காவிலிருந்து அவர்கள் திரும்பிக்கொண்டிருந்தார்கள். வீடு திரும்புவதற்கு அதுதான் அவர்களின் வழக்கமான சுருக்கு வழி. தாலிபாக் பாலத்திற்கு அருகில் வந்தபோது அவர்கள் எதிரே இருவர் வருவதைப் பார்த்தனர். ஒருவர் , நன்கு வளர்ந்த மனிதர்; மற்றொருத்தி, ஒரு குட்டிப் பெண். அவர்களும் வேறொரு தண்டவாளத்தின் மீது நடந்து வந்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பின்னே கொச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் , விரைந்து வந்தது. அதன் பிறகு நடந்ததை ரியாசே விளக்குகிறார்.

" அவர்கள் அபாயத்தில் இருப்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். ரெயில் வருவதைப் பார்த்ததும் நாங்கள் அவர்களை எச்சரிக்கும் விதமாகக் கூச்சல் போட்டோம். ஆனால், அவர்கள் எங்களைக் கவனிக்கவில்லை. அந்தப் பெண் , என்னைவிடச் சிறியவளாய் இருந்தாள். அவள் இறந்துவிடக் கூடாது என நினைத்தேன். நான், அவர்களை நோக்கி வெகு வேகமாக ஓடினேன். அப்போது ரெயில், அவர்களுக்கு மிக அருகில் வந்துவிட்டது. நான் அவர்களை நெருங்கி, அந்தச் சிறுமியை என் பக்கமாக இழுத்தேன். ஆனால், என் கால்கள், தண்டவாளங்களுக்கிடையே சிக்கிக்கொண்டன. ரெயில், எங்கள் மீது பயங்கரமாக மோதியது. நாங்கள் கீழே விழுந்தோம். ரெயில், எங்கள் மீது ஏறி, அரைத்துக்கொண்டு ஓடியது. நாங்கள் மூவரும் தண்டவாளத்தில் வெவ்வேறு இடங்களில் வீசி எறியப்பட்டோம். என்னால் அந்தச் சிறுமியைப் பார்க்க முடியவில்லை. அந்த மனிதர், சற்று தொலைவில் விழுந்து கிடந்தார். அவர் கால்களிலிருந்து ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. என் உடலிலிருந்தும் மிக அதிகமாக ரத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது. சிறிது தொலைவு சென்ற பிறகு, ரெயில் நின்றது. மிகப் பெரிய கூட்டம், எங்களைச் சூழ்ந்து நின்றது. ஆனால், யாரும் உதவ முன்வரவில்லை. அவர்கள் சும்மா பார்த்துக்கொண்டிருந்தார்கள். பிறகு ஒருவர் என்னைத் தூக்கினார். ஒரு போலிஸ்காரரும் உதவிக்கு வந்தார். நாங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோம். "

அங்கு ரியாசின் இரண்டு கைகளும் ஒரு காலும் நீக்கப்பட்டன. ரெயிலில் அடிபட்ட அந்தப் பெரியவர், சபீர் அலி, தன் இரண்டு கால்களையும் இழந்தார். அவருடைய மகள் , ஷாசியா, ஆறு வயது சித்திரச் சிறுமி, மரணமடைந்தாள். இன்று ரியாஸ் , எல்லோரும் பரிதாபப்படும் ஒரு நிலையில் இருக்கிறார். தம் ஒவ்வோர் அசைவிற்கும் அடுத்தவரின் உதவியை நாடும் துயர் மிகுந்த கட்டத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். ஆனாலும் அவர் முகத்தில் ஒரு புன்னகை மிளிர்கிறது. ரியாஸ், சிறப்பாக உருது பேசக்கூடியவர். எதைப் பற்றியும் உற்சாகமாக உரையாட அவர் தயாராயிருக்கிறார், அவருடைய உடல் ஊனத்தைத் தவிர. ரியாசிற்குச் சகோதர சகோதரிகள், எட்டுப் பேர் இருக்கிறார்கள். ரியாஸ், பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டவர். ஏனெனில், உருது பேசத் தெரிந்தாலும் அவருக்கு எழுதத் தெரியாது. தனிப்பட்ட ஆசிரியர்களைக் கொண்டு கல்வி கற்று, எதிர்காலத்தில் ஒரு மருத்துவர் ஆவேன் என்கிறார், ரியாஸ். தன் நிலைக்காக, ஒருபோதும் வருந்தவில்லை என்கிற ரியாசுக்கு உத்தரபிரதேச அரசு, விருது வழங்கிப் பாராட்டியது. மத்திய அரசு, ரியாசுக்கு சஞ்சய் சோப்ரா விருது வழங்கிக் கௌரவித்தது.

ஆனால், ரியாஸ் என்ன சொல்கிறார் தெரியுமா?
" அந்தச் சிறுமியை என்னால் காப்பாற்ற முடியவில்லை. அவள் மட்டும் இப்பொழுது உயிருடன் இருந்திருந்தால் நான் மிக மிக மகிழ்ந்திருப்பேன். "

ஆஹா ரியாஸ், மாமனிதரே, உமக்கு எமது தலைவணக்கம். உலக மானுடர்களே, இதோ இந்த ஒன்பது வயது வீரப் பிறவியைத் திரும்பிப் பாருங்கள். தம் இரு கைகளையும் ஒரு காலையும் இழந்தும் தன்னம்பிக்கை இழக்காத இந்த அக்கினிக் குஞ்சுக்கு உம் வீர வணக்கத்தைச் செலுத்துங்கள்.

இந்தத் தருணத்தில் நாம் சிலவற்றைச் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

சுருக்கு வழி, சோம்பல், அலட்சியம், அவசரம்....எனப் பற்பல காரணங்களைக் கூறி, நாம் தண்டவாளங்களில் நடப்பது, மரணத்திற்கு வரவேற்புப் பத்திரம் வாசிப்பது போன்றது. முழு மரணம் நிகழாமல், உடல் ஊனம் மட்டும் நிகழ்ந்துவிட்டால் அது இன்னும் மோசமானது. தண்டவாளத்தில் நடப்பது மட்டுமில்லை; மூடப்பட்ட ரெயில்வே கேட்டுகளின் இடுக்குகள் வழியாக நுழைந்து செல்வது, நின்றுகொண்டிருக்கும் ரெயில்களின் சக்கரங்களுக்கிடையே புகுந்து செல்வது, ஓடும் ரெயிலில் ஏறுவது, இறங்குவது, படிக்கட்டில் தொங்கியபடி பயணிப்பது, ரெயில் கூரைகளில் பயணிப்பது, ஓடும் ரெயிலிலிருந்து கைகளையும் தலையையும் வெளியே நீட்டுவது....என எண்ணற்ற முறைகேடுகள் நாளும் நடைபெற்று வருகின்றன. இவை அனைத்தையும் நிறுத்தி, முறையான வழிகளைக் கடைபிடிக்க வேண்டியது, இன்றியமையாதது.

ரியாஸ் கூட, ரெயில் பாதை வழியாக வந்திருக்கக் கூடாது. ஆனால், அவர் வந்திருக்காவிட்டால் சபீர் அலியைக்கூட காப்பாற்றியிருக்க முடியாது. இந்த நிகழ்வு, ஓர் எதிர்மறை எடுத்துக்காட்டாக நம் எண்ணங்களில் நிற்கவேண்டும். ஒரு நொடியில் உயிரையும் உறுப்புகளையும் சிதைத்த அந்த நிகழ்வு, இனி நிகழாதிருக்க உறுதி பூணுவோம். ரெயில், ஒரு யோகியைப் போல, தனக்கான நேர்ப்பாதையில் தீர்க்கமாகப் பயணிக்கிறது. அதன் பாதையில் நாம் குறுக்கிடலாமா? அதன் தவத்தைக் கலைக்கலாமா? மனிதன் தடம் மாறலாமா? தண்டவாளத்திலிருந்து சற்றே அன்று; நிறையவே விலகியிரும் பிள்ளாய்!