!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, February 05, 2005

எட்டு

( சிறுவர் பாடல் )

எட்டை எட்டால் பெருக்கினால்
எதிரே வந்திடும் ஆயகலை
எட்டை எட்டால் பெருக்கியே
ஒன்றைக் கழித்தால் நாயன்மார்.
எட்டை எட்டால் பெருக்கியே
நான்கைக் கழித்தால் தமிழாண்டு.
எட்டை எட்டுடன் கூட்டினால்
வாழ்த்துடன் தோன்றும் பேறுகளே!

எட்டை நாலால் பெருக்கினால்
இளநகை புரியும் வெண்பற்கள்.
எட்டை நாலால் பெருக்கியே
ஒன்றைக் கூட்ட, ஒதுக்கீடு.
எட்டை நாலுடன் கூட்டினால்
இனிதாய்க் காண்போம் மாதங்கள்.
எட்டில் மூன்றைக் கழித்துவிட்டால்
எதிரே பஞ்ச பூதங்கள்.

எட்டில் இரண்டைக் கழித்துவிடில்
இருந்து காண்போம் அருஞ்சுவைகள்.
எட்டில் ஒன்றைக் கழித்தாலோ
இனிக்கும் பெண்களின் வண்ணவகை
எட்டை எட்டாய் நிறுத்திவிடில்
இசைந்து காண்போம் திசையெல்லாம்.
எட்டா திருக்கும் யாவினையும்
ஒற்றை எட்டில் எட்டிடுவோம்.

No comments: