!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> பேரா. ஹாஜா கனியின் முனைவர் பட்டப் பொது வாய்மொழித் தேர்வு அழைப்பிதழ் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, July 27, 2011

பேரா. ஹாஜா கனியின் முனைவர் பட்டப் பொது வாய்மொழித் தேர்வு அழைப்பிதழ்

என் பள்ளித் தோழரும் நெருங்கிய நண்பருமான பேரா. ஹாஜா கனியின் (கவிஞர் ஆரூர் புதியவன்) முனைவர் பட்டப் பொது வாய்மொழித் தேர்வு, 2011 ஜூலை 28 அன்று, சென்னை, புதுக் கல்லூரியில் நடைபெறுகிறது. வாய்ப்புள்ளோர் பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டுகிறேன். முனைவர் ஹாஜா கனிக்கு முன்கூட்டிய வாழ்த்துகள்.


4 comments:

இப்னு ஹம்துன் said...

கவிஞர் ஆரூர் புதியவன் (பேரா. ஹாஜா கனி) உங்கள் நெருங்கிய நண்பர் என்பதறிந்து மகிழ்ச்சி.
இனிய நண்பர். அவருக்கு என் அன்பு வாழ்த்துகளைச் சொல்லுங்கள்.

முனைவர் அண்ணாகண்ணன் said...

கவிஞர்கள் அப்துல்ரகுமான்,ஈரோடு தமிழன்பன், இன்குலாப், அறிவுமதி, கல்வியாளர்கள், தமிழறிஞர்கள் முன்னிலையில் முனைவர் பட்டப் பொது வாய்மொழித் தேர்வு சிறப்புற நடந்தது; பேரா.ஹாஜா கனிக்கு முனைவர் பட்டம் வழங்கலாம் எனப் புறத் தேர்வாளரும் ஆய்வு நெறியாளரும் சென்னைப் பல்கலைக்குப் பரிந்துரைத்துள்ளார்கள் என அறிந்தேன். முனைவர் ஹாஜா கனிக்கு மீண்டும் வாழ்த்துகள்.

தமிழ்த்தோட்டம் said...

வாழ்த்துக்கள்

Unknown said...

நான் அவருடையா மாணவந்தான்... அசானுக்கு வாழ்த்துகள்...