!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கடோ த்கஜன் திரை விமர்சனம் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, May 25, 2008

கடோ த்கஜன் திரை விமர்சனம்



புஜ பல பராக்கிரமம் மிகுந்த கடோ த்தகஜனின் கதையை, அசையும் சித்திரங்களாக (அனிமேஷன்) காட்டுவதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ். முழுக்க முழுக்க அனிமேஷனில் தயாராகியுள்ள இந்தப் படம், பிரான்சின் கேன்ஸ் பட விழாவில் திரையிடத் தேர்வு பெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து இந்த விழாவுக்குச் சென்ற முதல் அனிமேஷன் படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றுள்ளது.

பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பீமனுக்கும் இராட்சசியான இடும்பிக்கும் பிறந்த மகனே கடோ த்கஜன். அவன் காட்டில் வளர்கிறான். அசாத்தியமான உடல் வலுவும் மாய வித்தைகளும் கொண்டனாக அவன் திகழ்கிறான். அவன் கட்ஜூ என்ற யானைக்கு உதவுகிறான். அவர்கள் இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள். தொட்டில் குழந்தையாக இருக்கும் போதே, தன்னைக் கொல்ல வரும் எதிரிகளைப் பந்தாடுகிறான். நொடிப் பொழுதில் உரு மாறுவது, உரு மாற்றுவது, பறப்பது, மிதப்பது... எனப் பல்வேறு மாயா ஜாலங்களும் நிகழ்த்துகிறான்.

கடலுக்கடியில் போய் தங்க முத்தினை எடுத்து வருகிறான். அர்ஜூனனின் மகன் அபிமன்யுவுக்காக அவன் காதலிக்கும் வத்சலாவைக் கட்டிலோடு சேர்த்து கவர்ந்து வருகிறான். வத்சலா உருவத்தில் அவளின் மாளிகையில் உலவுகிறான். ஸ்ரீ கிருஷ்ணர் ஆணைப்படி, மாய மாளிகை ஒன்றினை உருவாக்குகிறான். அபிமன்யு - வத்சலா திருமணம் நடக்க உதவுகிறான். துரியோதனன், சகுனி ஆகியோரின் சதியை வெல்கிறான்.

இப்படியாக ஒரு புராணக் கதையைச் சிறிய மாற்றங்களுடன் அழகான அனிமேஷன் படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ். 75 வயதில் அவர் மீண்டும் குழந்தையாகிவிட்டதை இந்தப் படம் எடுத்துக் காட்டுகிறது. சிறுவர்களைக் கவரும் காட்சி அமைப்புகள்; நகைச்சுவை கலந்த விவரிப்பு; கணீரென்ற குரலில் பாடல்கள்; பிரவீண் மணியின் விறுவிறுப்பான பின்னணி இசை ஆகியவற்றுடன் ஒன்றரை மணி நேரத்தில் நல்ல படத்தை வழங்கியிருக்கிறார். இடையில் கண்ணனின் கதையைக் கூறும் பாடல், சமயத்திற்கேற்ற இடைச் செருகல்.

'கல்யாண சமையல் சாதம்' என்ற பழைய பாடலில் கடோ த்கஜன் பல்வகை உணவுகளையும் கபளீகரம் செய்யும் காட்சியை இந்தப் படத்தில் மீண்டும் கொண்டு வந்திருக்கிறார்கள். மலையிலிருந்து விழும் பெரிய பாறையைச் சும்மா சர்வ சாதாரணமாகப் பிடித்துத் தள்ளும் கடோ த்கஜனின் மீது மற்றவர் கண் படாமல் இருக்க அம்மா இடும்பி, திருஷ்டி சுற்றிப் போடுவது, படத்தின் தமிழ்த் தன்மைக்கு நல்ல சான்று.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், பெங்காலி என ஏழு மொழிகளில் இந்தப் படம் தயாராகியுள்ளது. ஷெமாரு என்டெர்டெயின்மென்ட் மற்றும் சன் அனிமேடிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. சுட்டி, போகோ, ஜெட்டிக்ஸ் எனக் கட்டுண்டு கிடக்கும் சிறுவர்களை இழுக்கிற சக்தி, கடோ த்கஜனுக்கு உண்டு.

நன்றி: தமிழ் சிஃபி

2 comments:

Samukam said...

Hi,

I’d like to invite you to create your own space on Samukam.com - a Tamil social network similar to Facebook and MySpace.

Samukam.com is absolutely new (it’s just 4 days old!)

You can create your own space - for free - on Samukam.com and
* set up your own forums, blogs and groups
* interact with readers, members & friends
* share Photos, Music, Videos etc. Mobile uploading supported
* publicise an event

Samukam.com is a platform waiting to communicate your views and opinions with your audiences and friends.

So, look forward to seeing you on Samukam.com soon!

Best wishes,

Thiru

Samukam said...

Hi,

I’d like to invite you to create your own space on Samukam.com - a Tamil social network similar to Facebook and MySpace.

Samukam.com is absolutely new (it’s just 4 days old!)

You can create your own space - for free - on Samukam.com and
* set up your own forums, blogs and groups
* interact with readers, members & friends
* share Photos, Music, Videos etc. Mobile uploading supported
* publicise an event

Samukam.com is a platform waiting to communicate your views and opinions with your audiences and friends.

So, look forward to seeing you on Samukam.com soon!

Best wishes,

Thiru