!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> அண்ணா நூற்றாண்டுச் சிறப்பிதழ் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, September 14, 2008

அண்ணா நூற்றாண்டுச் சிறப்பிதழ்

தமிழ் சிஃபியின் அண்ணா நூற்றாண்டுச் சிறப்பிதழ் வெளிவந்துவிட்டது.

பாருங்கள்: http://tamil.sify.com/special/anna_centenary

அண்ணா பல்வேறு தருணங்களில் பேசிய 16க்கும் மேற்பட்ட சொற்பொழிகளின் ஒலி வடிவத்தை இணையத்தில் முதல் முறையாக, முழுமையாக இங்கு நீங்கள் கேட்டு மகிழலாம்.

அண்ணாவின் பல்வேறு அரிய புகைப்படங்களை இங்கு நீங்கள் கண்டு மகிழலாம்.

அண்ணா பற்றிய ஆழமான கட்டுரைகளை நீங்கள் படித்து மகிழலாம்.

குறுகிய காலத் திட்டமிடலில் இந்தச் சிறப்பிதழ் உருவானது. இதற்கு மலர் மன்னன், அண்ணா பேரவை,
http://arignaranna.info தளத்தை நிர்வகித்து வரும் செம்பியன் ஆகியோரின் ஒத்துழைப்பினை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

இந்தப் பக்கத்தில் இடம் பெற்றுள்ள அண்ணா உரைகளின் ஒலி வடிவம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அண்ணாவின் பேச்சைக் கேட்க முடியாத கடந்த மூன்று தலைமுறைகளுக்கும் இனி வரும் தலைமுறைகளுக்கும் இவை பெரும் கருவூலம்
என்பதில் ஐயமில்லை.

இந்தச் சிறப்பிதழில் இடம் பெற்றுள்ள வீ.சு.இராமலிங்கத்தின் மகா அண்ணா (ANNA THE GREAT) என்ற கட்டுரையில் அண்ணாவின் தனி ஆளுமையை முழுமையாகக் காண முடியும்.

அண்ணாவுடன் பழகிய பாரதி மணி அவர்களுடன் அண்மையில் பேசிக்கொண்டிருக்கும் போது, அண்ணா மட்டும் இன்னும் 20 ஆண்டுகளுக்கு உயிருடன் இருந்திருந்தால் தமிழ்நாட்டின் Topography ஏ மாறியிருக்கும் என்று குறிப்பிட்டார்.

அதே போன்று அண்ணாவுடன் பழகிய மலர் மன்னன், தாம் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் எதிர்க் கட்சித் தலைவர்களைச் சந்தித்து அவர்களின் ஆதரவைக் கோரிய அண்ணாவின் பெருந்தன்மையை உணர்ச்சிகரமாகப் பகிர்ந்துகொண்டார்.

தான் இருந்த போதே தனக்கு அடுத்த நிலையில் உள்ளவரைத் தலைவராக்கிய பக்குவம், எளிமை, நேர்மை, எதிரணியினரையும் மதிக்கும் பண்பு, தன் குடும்பத்தாருக்கு முக்கியத்துவம் கொடாமை..... என அவர் காட்டிய வழிகளை அவரின் தம்பிகள் வசதியாக மறந்து விட்டார்கள்.

அண்ணா வளர்த்தெடுத்த தனிப் பண்புகள், இக்காலத்தில் மறைந்தொழிந்து விட்டதை எண்ணித் துயரம் அடைகிறோம். இன்று அவரின் தொடர்ச்சியாக அரசியல் அரங்கில் உள்ளவர்கள் ஓர் ஓரத்தில் அவரின் பெயரை மட்டுமே
வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவரின் கொள்கைகள் காலி பெருங்காய டப்பா ஆகிவிட்டது தமிழகத்திற்குப் பேரிழப்பு.

அண்ணாவை எழுத்திலும் ஒலியிலும் ஒளியிலும் காணும் நம்மவர்கள் தாக்கம் பெற்று எதிர்கால மாற்றத்திற்கு வலிமையாகப் பங்களிப்பார்கள் என்ற உள்ளார்ந்த கனவும் இந்தச் சிறப்பிதழுக்குப் பின்னே உண்டு.

இந்தச் சிறப்பிதழ் பற்றி மின்தமிழ் குழுமத்தில் உள்ள இழை:
http://groups.google.com/group/minTamil/browse_thread/thread/8c0e3d6f89de6362

No comments: