!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> இரண்டு பசுக்கள் | Two cows ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, September 10, 2020

இரண்டு பசுக்கள் | Two cows

நெருப்பில் ஈக்கள் மொய்ப்பதில்லை, ஓடும் நீரில் பாசி பிடிப்பதில்லை என்ற வரிகளை எங்கோ படித்திருக்கிறேன். நம் தெருவுக்கு இன்று வந்த இரண்டு பசுக்களைப் பார்த்தேன். அசைவில்லாமல் நின்ற பசுவின் மீது அதிக ஈக்களும் அசைந்துகொண்டிருந்த மற்றதன் மீது மிகக் குறைந்த ஈக்களும் இருக்கக் கண்டேன். தொடர் இயக்கமே நம்மைத் துடிப்புடன் இருக்கச் செய்யும். சில்லறைத் துன்பங்கள், நம்மை அண்டாமல் இருக்கவும் செய்யும் எனக் கண்டுகொண்டேன்.



 

No comments: