!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> புள்ளிக் கவிதைகள் - பகுதி 8 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, October 08, 2009

புள்ளிக் கவிதைகள் - பகுதி 8

Photo Sharing and Video Hosting at Photobucket

நாணயம் சுண்டினேன்.
நீ கேட்டபடி
தலை விழுந்தது.

====================

படபடக்கிற பட்டாம்பூச்சி,
மலரில் அமர்கிறது...
தேனருந்தும் வேளையில்
சிறகுகள் அசைவதில்லை...

====================

கடிக்கிற கொசுவை
அடிப்பதா? விரட்டுவதா?
விரட்டினால் மீண்டும் வருமே!
அடித்தால் செத்துவிடுமே!

====================

விரல் பிடித்துன்னைத்
தொடர்கிற என்னை
உயரே தூக்க மாட்டாயா?

====================

Dancing doll my singing soul!
Diving bird in shining sky!
Sleeping beauty speaking less!
Smiling darling making life!

====================
படம்: அண்ணாகண்ணன்
இடம்: கோனாரக் சூரிய கோயில்

No comments: