!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2004/06 - 2004/07 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, June 30, 2004

வருகிறது சித்திரசுரபி

அமுதசுரபி, வாரசுரபிக்கு அடுத்தபடியாகப் பிறக்க இருக்கிறது, சித்திரசுரபி. புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களுக்காகவே வெளிவரும் இணைய இதழ். இரு வாரங்களுக்கு ஒரு முறை வலையேறும். ஒவ்வோர் இதழும் ஒரு குறிப்பிட்ட தலைப்பிலான படங்களைக் கொண்டிருக்கும். ஓர் இதழுக்குக் குறைந்தபட்சம் 16 படங்கள் வெளியிடத் திட்டம். உலகெங்கும் உள்ள தமிழன்பர்கள், தாம் எடுத்த , தமக்குச் சொந்தமான புகைப்படங்களை எமக்கு அனுப்பலாம். தாம் வரைந்த ஓவியங்களையும் கேலிச் சித்திரங்களையும்கூட அனுப்பலாம். படங்களுக்குப் பொருத்தமான செய்திக் குறிப்பு, வர்ணனை, கவிதை என 2 அல்லது 3 வரிகளில் எழுதி அனுப்புவது சிறப்பு. இதழ் முழுதும் ஒரே நபரின் படங்கள் வெளிவருமானால் இறுதிப் படமாக, புகைப்படக் கலைஞர் அல்லது ஓவியரின் புகைப்படத்தையும் அவரைப் பற்றிய சிறுகுறிப்பையும் வெளியிடலாம். அனுப்புவோர், இதையும் கருத்தில் கொள்ளவேண்டும். இலாப நோக்கற்ற, பரிசோதனை முறையிலான இம்முயற்சியில் பங்கேற்க வருமாறு ஆர்வலர்களை அழைக்கிறோம். அன்பர்கள், தமது படங்களை அனுப்பவேண்டிய முகவரி :chitrasurabi@rediffmail.com
- அண்ணா கண்ணன், பொறுப்பாசிரியர்.