!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> தமிழ்சிஃபி நவராத்திரி சிறப்பிதழ் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, September 26, 2006

தமிழ்சிஃபி நவராத்திரி சிறப்பிதழ்

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, தமிழ்சிஃபி இணைய இதழ், சிறப்பிதழ் ஒன்றைத் தயாரித்துள்ளது.

இதில்

எல்.ஆர். ஈஸ்வரி, பி.சுசீலா ஆகியோர் பாடிய அம்மன் பாடல்கள்; குடவாயில் சகோதரிகளின் குரலில் 20 பாடல்கள்; செளந்தர்ய லஹரியின் சுலோகமும் பொருளும் ஆகிய ஒலிப் பதிவுகளைக் கேட்கலாம்.

மேலும் செளந்தர்ய லஹரியின் இலக்கிய நயத்தையும் லட்சுமி - சரஸ்வதி ஆகியோருக்கு இடையிலான வேதாந்தக் கண்ணோட்டத்தையும் கல்யாணி வெங்கடராமன் அழகுற விவரித்துள்ளார். ஷைலஜா, நவராத்திரி சுபராத்திரி என்ற கட்டுரையில் இந்தியா முழுவதும் நவராத்திரி கொண்டாடப்படும் விதத்தை விளக்கியுள்ளார்.

மேலும் ந. பிச்சமூர்த்தியின் 'விஜயதசமி' சிறுகதையும் மகாகவி பாரதியின் பல்வேறு சக்திப் பாடல்களும் இச்சிறப்பிதழுக்கு வலிமை சேர்க்கின்றன.

நவராத்திரி கொண்டாடப்படும் முறைகள், தத்துவங்கள், கொலு அமைக்கும் விதம், வகைகள், நவராத்திரி விரதம், அம்மன்களின் பெருமைகள், சுண்டல் செய்யும் விதங்கள், நவராத்திரி நைவேத்தியப் பட்டியல்.... எனப் பலவும் இந்தச் சிறப்பிதழை அலங்கரிக்கின்றன.

இந்தச் சிறப்பிதழ், வாசகர்களைக் கவரும் என்று நம்புகிறேன்.


No comments: