!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> மாஃபா பாண்டியராஜன் உடன் அரட்டை ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, June 28, 2008

மாஃபா பாண்டியராஜன் உடன் அரட்டை


மனிதவள மேலாண்மைத் துறையில் மிகுபுகழ் பெற்ற Ma Foi நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மாஃபா பாண்டியராஜன், சிஃபி வாசகர்களுடன் அரட்டை அடிக்க இசைந்துள்ளார். ஜூலை 1 அன்று இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு இவருடன் நீங்கள் உரையாடலாம்.

1992இல் அறுபதாயிரம் முதலீட்டில் தொடங்கிய Mafoi management Consultant Ltd நிறுவனம், இன்று 14 நாடுகளில் 108 அலுவலகங்களைக் கொண்டுள்ளது. இதில் 1850 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த நிறுவனத்தின் வாயிலாக இதுவரை 1,85,000 பேர் வேலை பெற்றுள்ளார்கள். மனிதவள மேலாண்மைத் துறையில் மாஃபா, உலகின் கவனத்தையே தன் பக்கம் ஈர்த்துள்ளது என்றால் மிகையில்லை. 'Mafoi' என்றால் பிரெஞ்சு மொழியில் நம்பிக்கை என்று பொருள். ஒவ்வொரு மூன்று பணி நிமிடங்களிலும் ஒருவரைப் புதிதாக வேலைக்கு அமர்த்த உதவுகிறது இந்த நிறுவனம்.

Recruitment, HR, Hr out sourcing ஆகிய மூன்று வழி முறைகளில் இந்த நிறுவனத்தினர் இயங்குகிறார்கள். வேலைக்கு ஆட்களை அமர்த்துவதோடு, இவர்கள் பணி முடிந்து விடுவதில்லை. நிறுவனத்தில் பணிபுரிகிற தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை ஆராய்ந்து, நிறுவனத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கிறார்கள். இதனால் நிறுவனத்தால் தன்னுடைய இலக்கைத் திட்டமிட்டபடி எட்ட முடிகிறது. மாஃபா தொழில் நிர்வாக ஆலோசனை மையம் இன்று இந்தியாவில் முதலிடத்தில் இருக்கிறது. உலகத்தில் பெரிய நிறுவனங்களின் பட்டியலான 'Fortune-500'இல் 122 நிறுவனங்களுக்கு இவர்கள் தொழில் ரீதியான சேவைகளை அளித்து வருகிறார்கள்.

இதன் நிறுவனர், கே.பாண்டியராஜன். சிவகாசியிலிருந்து 5 கிமீ தூரத்தில் உள்ள விலாம்பட்டி என்கிற கிராமத்தில் பிறந்தவர். கோயம்புத்தூரில் பொறியியல் படிப்பை முடித்தவுடன் ஜாம்ஜெட்பூர் XLRI-இல் எம்.பி.ஏ சேர்ந்து படித்தார். எம்.பி.ஏவில் மனிதவள மேம்பாட்டுத் துறையைத் தேர்தெடுத்துப் படித்தார். படிக்கும் போதே Campus interview-இல் தேர்வு பெற்றார். கல்கத்தா பிரிட்டிஷ் ஆக்ஸிஜன் நிறுவனத்தில் 1984-இல் பணியில் அமர்ந்தார். இந்தக் கம்பெனியில் ஆறு வருடங்கள் பணியாற்றி மேலாளர் அளவுக்கு உயர்ந்தார். அடுத்ததாக சென்னையிலுள்ள 'Idea' என்னும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து Exports, HRD ஆகிய துறைகளில் 3 வருடங்கள் பணியாற்றினார். 1992 ஆகஸ்ட் 15 ஆம் தேதி Mafoi நிறுவனத்தைத் தொடங்கி இந்த அளவுக்கு உயர்ந்துள்ளார். இவரின் மனைவி ஹேமலதா, சார்டர்ட் அக்கவுண்டண்டாக இருந்து அந்த வேலையை உதறிவிட்டு 1994-லிருந்து இந்த நிறுவனத்தின் இயக்குநர்களுள் ஒருவராகப் பணியாற்றி வருகிறார்.

இலட்சக்கணக்கானோருக்கு வேலை பெற்றுக் கொடுப்பது ஒரு புறம் இருக்க, சமூக சேவைகளிலும் இவர் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். ஆண்டுதோறும் குழந்தைகள் சிலரை, தன் பாட்டியின் பெயரிலான சொர்ணம்மாள் கல்வி அறக்கட்டளையின் வழியாகத் தத்தெடுத்துப் படிக்க வைக்கிறார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் மூடப்பட இருந்த பள்ளியை வாங்கி, Set Anne's of excellence என்ற பெயரில் தொடர்ந்து நடத்தி வருகிறார். மாதமொரு உடல் ஊனமுற்ற தொழில் முனைவோரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு ரூபாய் 5000 தந்துதவுகிறார். சுய உதவிக் குழுக்கள் வழியாக 15,000 பெண்களுக்கு உதவியுள்ளார். பல்வேறு சமூக அமைப்புகளிலும் ஊக்கத்துடன் பணியாற்றி வருகிறார்.

சிறப்பு மிக்க இந்தச் சாதனையாளர், சிஃபி வாசகர்களுடன் அரட்டை அடிக்க இசைந்துள்ளார். ஜூலை 1 அன்று இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு இவருடன் நீங்கள் உரையாடலாம். வேலைவாய்ப்பு, தொழில், மனிதவள மேலாண்மை தொடர்பான உங்கள் கேள்விகளை எழுப்பிப் பயன் பெறுங்கள்.

நீங்கள் செல்ல வேண்டிய பக்கம்: http://sify.com/connect/celebchat/chathome.php

இவருடன் அரட்டை அடிக்க, உங்களிடம் சிஃபி ஐடி இருக்க வேண்டும். சிஃபி ஐடி இல்லாதவர்கள், இங்கு சென்று பதிந்து பெறுங்கள்.

1 comment:

முனைவர் அண்ணாகண்ணன் said...

வாசகர்களின் கேள்விகளுக்கு மாஃபா பாண்டியராஜனின் பதில்களை இங்கே படியுங்கள்: http://tamil.sify.com/fullstory.php?id=14706668