!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, August 31, 2004

புதுப் புதுப் போராட்டங்கள்

அண்ணாகண்ணன்


சென்னையில் தயாராகி, அமெரிக்காவில் வெளியாவது, தி தமிழ் டைம்ஸ் என்ற மாத இதழ். கவிஞர் ஜெயபாஸ்கரன், இதன் சிரியராகப் பொறுப்பேற்றுள்ளார். அவர் என்னிடம் கவிதை கொடுங்கள் என்றுதான் கேட்டார்( இவருக்காவது நான் கவிஞன் என்பது நினைவில் உள்ளதே!). அண்மையில் நடைபெற்ற விநோத போராட்டங்கள் என் மனத்தைக் கவர்ந்ததால் 'இதைப் பற்றி எழுதட்டுமா?' எனக் கேட்டேன். அஅமெரிக்க மக்களுக்கு இங்கு நடப்பவற்றைத் தெரிவிக்க, இது நல்ல வாய்ப்பு. இந்தக் கட்டுரையையே கொடுங்கள் அ என்றார். அது, இதோ:

போராட்டங்களால் உலகமே ட்டம் காணும் காலம், இது. கருப்பையினுள் நுழையும்இலட்சக்கணக்கான உயிரணுக்களுள் ஓர் அணுதான் கருவுறுகிறது. அதற்கே அந்த அணு, ஒரு போராட்டம் நடத்தவேண்டி இருக்கிறது. வெளியே வந்த பிறகும் குழந்தை,தன் ஒவ்வொரு கோரிக்கைக்கும் அழுது ர்ப்பாட்டம் செய்கிறது. தான் கேட்டது கிடைக்கும் வரை அது, கையை அசைத்து - காலை உதைத்து- படுத்துப் புரண்டு- வீரிட்டு அலறிப் பிடிவாதம் பிடிக்கிறது. தன் நோக்கம் நிறைவேறும் வரை யாரோடும் பேசாமல், எதையும் சாப்பிடாமல்- குடிக்காமல் சண்டித்தனம் செய்கிறது. கடைசியில் வேறு வழியில்லை என்று பெரியவர்கள்தாம் இறங்கி வரவேண்டி இருக்கிறது. இப்படி,குழந்தையின் குருதியிலேயே போராட்ட உணர்வு கலந்திருப்பதால் வளர்ந்த பிறகு யாரும் கற்றுக் கொடுக்காமலேயே மனிதன் போராடத் தொடங்குகிறான்.

இப்படி எல்லோரும் போராடும் போது போராட்டம் என்பதே சாதாரணமான ஒன்றாய்கிவிட்டது. ' எங்க த்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார் ' என்பது போல் ஒப்புக்கு நடக்கும் போராட்டங்கள் நாம் அறியாதவையா என்ன? தொடங்கும் இடத்தில்500 பேரும் முடியும் இடத்தில் 50 பேருமாகப் பேரணி நடப்பதால்தானே இடையில்கழன்றுவிடுவோரைத் தடுக்க, கண்காணிப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள்? 50 ரூபாயும் பிரியாணி பொட்டலமும் எனப் பேசி, ள் பிடித்து நடக்கும் பிரமாண்டப் பேரணிகளும்பொதுக்கூட்டங்களும் இந்த மண்ணுக்கு என்ன புதிதா? இவ்வாறு இல்லாமல் உண்மையாகநடந்தால் 36 அமைப்புகள் ஒருங்கிணைந்த குடையமைப்பில் 36 பேர்தானே இருப்பார்கள்?

ள் திரட்டி, படை பலம் காட்ட முடியாதவர்கள், வெவ்வேறு புதிய உத்திகளில்போராட்டங்களை அறிவிக்கிறார்கள். மற்றவர்களின் கவனத்தை உடனே திருப்புவது எப்படி என்பதே இந்தப் புதிய போராட்டக்காரர்களின் நோக்கம். ஒவ்வொருவருக்கும்ஒவ்வொரு விதமான கோரிக்கைகள். ஒவ்வொரு கோரிக்கைக்கும் வெவ்வேறு வகையானபோராட்டங்கள்.

கழுதையிடம் மனுகஸ்டு 12ம் தேதி, புதுவையில் கழுதையிடம் மனு அளிக்கும் போராட்டம் நடந்தது. புதுவை சாரத்தில் உள்ள நில அளவைப் பதிவேடுகள் துறை அலுவலகம் முன் இது நடந்தது. இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ர். விஸ்வநாதன், பட்டா வழங்கக் கோரி, கழுதையிடம் மனு அளித்தார். அதிகாரியிடம் மனு அளித்தும் பயன் இல்லை; அவர் காகிதத்தைத் தின்று விடுகிறார் என்பதைக் குறிப்பாக உணர்த்தியுள்ளார்கள்.

மதுக் கடைக்குப் பூட்டு அரசியல் கட்சிகளில் பாட்டாளி மக்கள் கட்சி, புதிய புதிய போராட்டங்களை அறிவிப்பதில் முன்னணியில் உள்ளது. மதுக் கடைகளை மூட வலியுறுத்தி, பிரசாரம் செய்யும் அக்கட்சி, மதுக் கடைகளுக்குப் பூட்டுப் போடும் போராட்டத்தை கஸ்டு 23ம் தேதி நடத்தியுள்ளனர். பா.ம.க. மகளிர் அணியினர், கிராமப்புறத்தில் உள்ள மதுக்கடைகளுக்குப் பூட்டுப் போடுவதான இப்போராட்டம் சாதுரியமானது. பெண்கள் தொடர்புடைய அனைத்தும் உணர்வெழுச்சியை(சென்டிமெண்ட்)த் தூண்டக் கூடியவை.

மணி அடிக்கும் போராட்டம்தமிழக அரசு, மக்கள் நலனைக் கவனிக்காமல் தூங்குகிறது; அதை எழுப்புவதற்காக என்று சொல்லி மணி அடிக்கும் போராட்டத்தைக் கடந்த மாதம் பா.ம.க. நடத்தியது. சென்னையில் தூய ஜார்ஜ் கோட்டைக்கு அருகில் அக்கட்சியினர் சிலர் மணி அடித்தனர்.

அஞ்சல் அட்டைப் போராட்டம்பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், தமிழ்நாடு முழுவதும் கஸ்டு 11 ம் தேதி, அஞ்சல் அட்டைப் போராட்டம் நடத்தினர். தங்களிடமிருந்து தவணை முறையில் பெற்ற தொகையை நிலம் வாங்கப் பயன்படுத்திய கூட்டுறவு சங்கத்தைக் கண்டித்தும் தங்கள் தொகையைப் பாதுகாக்க வேண்டியும் அஞ்சல் அட்டைகளை நிர்வாகிக்கு அனைத்து ஊழியர்களும் அனுப்பிவைத்தனர். சாதாரண அஞ்சல் அட்டை என்று எண்ணவேண்டாம். வல்லவனுக்குப் புல்லும் யுதம் என்பதை நிரூபிப்பதோடு போராட்டத்தில் அனைத்து ஊழியர்களையும் ஈடுபடச் செய்வதற்கு, இப்போராட்டம் உதவியுள்ளது.

சைக்கிள் பேரணிவிழுப்புரத்தில் காவல் துறை தடை உத்தரவு 30(2) நடைமுறையில் உள்ளதால் அங்கு பேரணிகள் நடத்தக் காவல் துறை அனுமதிக்கவில்லை. அதை மீறி, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட தி.மு.க.வினர் 300 பேர், கஸ்டு 10 அன்று சைக்கிள் பேரணி சென்றனர். தடையை மீறிச் சென்றதால் போக்குவரத்திற்குப் பெரும் இடையூறு ஏற்பட்டதாக 300 பேர் மீதும் காவல் துறையினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். மிதிவண்டியில் செல்வது, சாதாரணமானது என்றாலும் ஒரு நோக்கம் கருதிச் செல்வதும் கூட்டமாகச் செல்வதும் போராட்ட மதிப்பைப் பெறுகின்றன. இன்றும் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க, ஊழலை ஒழிக்க என ஏதேனும் காரணம் சொல்லி, நெடுந்தூர மிதிவண்டிப் பயணம் மேற்கொள்ளும் பலரை நம்மால் பார்க்க முடியும்.

தீக்குளிக்க முயற்சி
கோவை ட்சியாளர் அலுவலகத்தில் கஸ்டு 9ம் தேதி, காணாமல் போன தம் கணவரை மீட்டுத் தரக் கோரி, விஜயலெட்சுமி என்பவர் தீக்குளிக்க முயன்றார். அன்றைய நாள், அங்கு மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடந்துகொண்டிருந்தது. ங்காங்கே மக்கள் கூட்டம் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். அப்போது மனு கொடுக்க வந்த இவர், பையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் புட்டியை எடுத்து, உடலில் ஊற்றினார். மற்றவர்கள் பதற்றத்தோடு பார்க்கும் போதே தீப்பெட்டியை எடுத்து, குச்சியைக் கிழிக்கப் போனார். அங்கிருந்தவர்கள் ஓடிச் சென்று அதைத் தட்டிவிட்டனர். அவரின் மனுவைப் பெற்ற காவல் துறையினர், தற்கொலை முயற்சிக்காக விஜயலெட்சுமியைக் கைது செய்தனர். இது, தெளிவாக மற்றவர்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பும் ஒரு உத்தி தான். கைதான தலைவரை விடுவிக்க வேண்டும், தலைவர் மரணம் எனப் பல நேரங்களில் தீக்குளிப்பது, தமிழ்நாட்டில் சாதாரண ஒன்று. பிறகு, தீக்குளித்த தொண்டருக்கு உதவித் தொகை வழங்கும் அடுத்த காட்சியும் அரங்கேறும்.

உள்ளிருப்புப் போராட்டம்கல்வி, வணிக மயமாவதைத் தடுக்கக் கோரி, அனைத்துக் கல்லூரி மாணவர்கள், பள்ளிக் கல்வி இயக்ககம் முன் கடந்த மாதம் போராட்டம் நடத்தினர். சாதாரணமாகக் கூடி நின்று குரலெழுப்பும் போராட்டம் தான் அது. அப்போது காவல் துறையினர், மாணவர்கள் சிலரைத் தாக்கினர். இதைத் தொடர்ந்து, மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்துப் பற்பல கல்லூரிகளின் மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். கஸ்டு 13ம் தேதி, இராணி மேரி மகளிர் கல்லூரி மாணவியர்கள், உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். அரசையும் காவல் துறையையும் கண்டித்து, தங்கள் வளாகத்திற்கு உள்ளேயே உட்கார்ந்து, உரக்கக் குரல் எழுப்பினர். பெண்கள், பொதுவாக இத்தகைய போராட்டங்களையே தேர்ந்தெடுப்பார்கள். இதுதான் அவர்களுக்குப் பாதுகாப்பானது.

நிர்வாணப் போராட்டம்னால், உக்கிரமமான சூழ்நிலையில் பெண்கள், புலியென மாறி விடுவார்கள் என்பதற்கு மணிப்பூர் பெண்களே சான்று. ஜூலை 10ம் தேதி இரவு மணிப்பூரில் மனோரமாதேவி என்ற 32 வயதுப் பெண், இந்திய இராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகி, கொல்லப்பட்டு, தூக்கி வீசப்பட்டார். இரவு நேரத்தில் வந்து இக்கொடூர செயலைச் செய்ததற்கு, இராணுவம் சொன்ன காரணம், மனோரமா, தீவிரவாத இயக்கம் ஒன்றின் கமாண்டோ என்பதே. இராணுவத்திற்குக் கேள்வி முறை இல்லாமல் அதிகாரம் வழங்கும் யுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும் எனப் பெண்கள் அமைப்பினர் உள்பட, மணிப்பூர் மாநிலம் முழுதும் போராட்டத்தில் குதித்துள்ளது. இதன் ஒரு கட்டமாக, பெண்கள், ஜூலை 15 அன்று , நிர்வாணப் போராட்டம் நடத்தினர். உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் அசாம் ரைபிள்ஸ் அலுவலகம் முன்பு, பத்திற்கும் மேலான பெண்கள், கூக்குரல் எழுப்பினர். ' இந்திய இராணுவமே, எங்கள் சதைகளை எடுத்துக்கொள்; மனோரமாக்களை விட்டுவிடு ' , ' இந்திய இராணுவமே, எங்களைக் கற்பழி ' என்றெல்லாம் எழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் தமக்கு முன்பாகப் பிடித்திருந்தனர்.

கூண்டோடு விடுப்பு மணிப்பூரில் நிர்வாணப் போராட்டம் தவிர, ஏராளமான போராட்டங்கள் நடந்துள்ளன. இதே கோரிக்கையை வலியுறுத்தி, அரசு ஊழியர் அனைவரும் கூண்டோடு விடுப்பு எடுத்துள்ளனர். வெகு சிலரைத் தவிர, பெரும்பாலான ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை. இதனால் அரசு எந்திரம் முழுதும் ஸ்தம்பித்துவிட்டது.

தீப்பந்த ஊர்வலம்மக்களின் தீவிரப் போராட்டத்தால் இம்பால் நகராட்சிப் பகுதியில் மட்டும் யுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்குவதாக அரசு அறிவித்தது. இதனால் நிறைவடையாத மக்கள், மணிப்பூர் மாநிலம் முழுதிலிருந்தும் இச்சட்டத்தை நீக்க வலியுறுத்தி, கஸ்டு 12ம் தேதி இரவு, தீப்பந்த ஊர்வலம் நடத்தினர்.

மனிதச் சங்கிலிகஸ்டு 15ம் தேதி அன்று, மனோரமா நிகழ்வையொட்டி 32 அமைப்புகள் இணைந்து , மாநிலம் முழுதும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தின.

பாச விளம்பரங்களைக் கண்டித்து, சென்னை புரசைவாக்கத்தில் மாணவ- மாணவியரின் மனிதச் சங்கிலிப் போராட்டம், கஸ்டு 10ம் தேதி நடந்தது. இதில் புரசை எம்.சி.டி. முத்தையா செட்டியார் ண்கள் , பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவியர் பங்கேற்றனர். வேறு சில அமைப்பினரும் இதில் கலந்துகொண்டனர். ஒருவரோடு ஒருவர் கைகொடுத்து, இதை எதிர்க்கிறோம் எனக் குறிப்பாக உணர்த்துவதற்கு மனிதச் சங்கிலி உதவும். ட்கள் குறைவாக இருந்தாலும் அதிகமானோர் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தைக் காட்டுவதற்கு இது, சிறந்த உத்தி.

கூண்டுக்குள் அமர்ந்து ர்ப்பாட்டம்இப்படி, பெரிய பெரிய கோரிக்கைகளுக்காகத்தான் போராட்டம் நடக்க வேண்டுமா, என்ன! தென்கொரியாவில் நாய்க்கறி தின்பதற்கு எதிராகக் கடந்த மாதம், சோங்னாம் நகரில் ஒரு பேரணி நடந்தது. அதில் நாய்களை அடைத்து வைக்கும் கூண்டு ஒன்றிற்குள் ர்ப்பாட்டக்காரர் ஒருவர் அமர்ந்துகொண்டார். நாய் போன்ற முகமூடி ஒன்றையும் அணிந்துகொண்டார். நாய்களையும் இப்படித்தான் அடைத்து வைக்கிறீர்கள் என்பதை அவர் குறிப்பாக உணர்த்தினார்.

சிறை நிரப்பும் போராட்டம்ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சிபுசோரனை விடுதலை செய்யக் கோரி, அக்கட்சித் தொண்டர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜார்க்கண்ட் தலைநகர் இராஞ்சியில் கஸ்டு 7 ம் தேதி, இது நடந்தது. கட்சிக் கொடிகள், பதாகைகள், கட்சியின் சின்னமான வில்- அம்பு கியவற்றோடு தொண்டர்கள் கைதாயினர். இத்தகைய போராட்டம், தமிழ்நாட்டில் பல முறைகள் நடந்துள்ளன.

நடைப் பயணம்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ, நெல்லை முதல் சென்னை வரை 42 நாளில் 1,025 கி.மீ. தூரம் நடந்து வருகிறார். கஸ்டு 5ம் தேதி நெல்லையில் தொடங்கிய இது, செப். 15 அன்று சென்னையில் முடிகிறது. நதிநீர் இணைப்பு, காவிரிச் சிக்கலில் தமிழக நலனைப் பாதுகாத்தல், பொது வாழ்வில் சீர்கேடு நீக்குதல், சாதி- மத உணர்வுகளைத் தடுத்தல், வன்முறை மனப்பாங்கை இளைஞர்கள் கைவிடுதல் கியவற்றோடு அ.தி.மு.க. ட்சியை எதிர்த்தல் கிய நோக்கங்களுக்காக இந்த நடைப் பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார். ஏராளமான நடைப்பயணங்கள் , தமிழகத்திலும் வெளியிலும் நடைபெற்றுள்ளன. ஒரு புதிய தொடக்கத்திற்கு அடையாளமாக, குத்துவிளக்கு ஏற்றுவோர், பலர். வைகோ, தாம் புறப்படும் முன் வேப்பமரக் கன்றை நட்டார்.

உடல் முழுதும் நாமம் சரிவர ஊதியம் கொடுக்கவில்லை , நீதி கிடைக்கவில்லை என்போர், உடல் முழுதும் நாமம் போட்டுக்கொண்டு தெருவில் ஊர்வலம் வந்துள்ளனர். ஏமாற்றிவிட்டார் என்பதை நெற்றியில் நாமம் போட்டுவிட்டார் எனச் சொல்வோம். அதனைச் சிலர், நடைமுறையில் காட்டியுள்ளனர்.

வாயில் கருப்புத் துணி கட்டிப் போராட்டம்பேச்சுச் சுதந்திரத்திற்குக் கட்டுப்பாடு உள்ளது, கருத்துரிமை மறுக்கப்படுகிறது என்போர், வாயில் கருப்புத் துணி கட்டிப் போராட்டம் நடத்துவதுண்டு. பொதுவாக, எதிர்ப்புக் காட்ட, கருப்புக் கொடி ர்ப்பாட்டம் நடக்கும். இன்னும் சிலர், சட்டையில் கருப்புக் கொடியைக் குத்திக்கொண்டு பணியாற்றுவதுண்டு.

தற்கொலை மிரட்டல்தன் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி, உயர்ந்த கட்டடம், மரம், தொலைபேசி அலைக் கோபுரம்..போன்றவற்றில் ஏறி நின்று, குதித்துவிடப் போவதாக மிரட்டுவது. பொதுவாக, இவர்கள் கொஞ்ச நேரம் அலைக்கழித்து விட்டுக் கீழே இறங்கிவிடுவர். முன்னேறிய நாடுகளில், இவர்கள் மிரட்டத் தொடங்கிய உடனேயே சுற்றிலும் வலையை விரித்து விடுவார்கள். இந்தியாவில் ஏறியோர், தாமாக இறங்கினால்தான் உண்டு.

தண்டவாளத்தில் தலை டால்மியாபுரத்திற்குக் கல்லக்குடி எனப் பெயர் மாற்ற வேண்டும் எனக் கோரி, தி.மு.க.வினர், ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குழு குழுவாகச் சென்று தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தனர். மு.கருணநிதி, இந்தப் போராட்டத்தின் மூலம் முக்கிய தலைவர்களுள் ஒருவராகிவிட்டார்.

பலகையைத் தார் பூசி அழி1967 இந்தி எதிர்ப்புக் காலக்கட்டத்தில் இந்தி எழுத்துகள் அடங்கிய பெயர்ப் பலகைகளைத் தார் பூசி அழித்தனர். இத்தகைய போராட்டத்தை ஓரிரு ண்டுகளுக்கு முன் பா.ம.க.வினர் மீண்டும் நடத்தினர். சுவரொட்டிகளின் மீது சாணி அடித்ததன் தொடர்ச்சியே இது.

விதவிதமான கோரிக்கைகளுக்காக, விதவிதமான போராட்டங்கள் நடப்பது, உலகெங்கும் வழக்கம்தான். இந்தப் போராட்டங்களைப் பொதுவாக இரு வகைகளாகப் பிரிக்கலாம். அவை: அரசு அல்லது சமூகம், செய்யச் சொல்வதைச் செய்யாதிருப்பது; செய்யக் கூடாதென்பதைச் செய்வது. முன்னதற்கு, வேலை நிறுத்தம், வரிசெலுத்தாமை, வாக்களிக்காமை , கடையடைப்பு, ஒத்துழையாமை போன்றவை நல்ல எடுத்துக்காட்டுகள். பின்னதற்கு, சட்ட நகல் எரிப்பு, நிர்வாண ஓட்டம், கொலை, கொள்ளை, ரெயில் கவிழ்ப்பு...போன்றவை சான்றுகளாகும்.

எதற்காகப் போராடுகிறோம் என்பதை விட, எப்படிப் போராடுகிறோம் என்பதே முக்கியம். இதையே இத்தகைய விநோத போராட்டங்கள், அடிக்கோடு போட்டு அறிவிக்கின்றன.

No comments: