!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> அண்ணாமலை தாம்பரம் பேச்சு | பாரதிய ஜனதா சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, June 22, 2023

அண்ணாமலை தாம்பரம் பேச்சு | பாரதிய ஜனதா சாதனை விளக்கப் பொதுக் கூட்டம்

நரேந்திர மோடி தலைமையிலான 9 ஆண்டு ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம், சென்னை தாம்பரத்தில் 2023 ஜூன் 20 அன்று நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை பேருரை ஆற்றினார். இதே மேடையில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 'அண்ணாமலை தமிழ்நாட்டின் தலைவர் இல்லை, இந்தியாவின் தலைவர்' எனப் பாராட்டிப் பேசினார். 

அண்ணாமலை பேசும்போது, அருகில் உள்ள மசூதியில் தொழுகை நடைபெற்றது. அந்தப் பாங்கு ஓசையைக் கேட்டு, தமது உரையை மூன்று நிமிடங்கள் அவர் நிறுத்திவைத்தார். கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா, காங்கிரஸ் தலைவர் காமராசர் ஆகியோரைப் போற்றினார். திமுக மீது புதிய ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். நரேந்திர மோடியின் பெருமைகளை, மத்திய அரசின் சாதனைகளை, பல்வேறு துறைகளில் இந்தியாவின் வளர்ச்சியை விரித்துரைத்தார். 

பெரும் திரளான மக்கள் அண்ணாமலை பேச்சைக் காத்திருந்து கேட்டனர். அவர் பேசி முடிக்கும் வரை இம்மியும் நகராமல் நின்றிருந்தனர். அரசியல் வானில் ஒரு நட்சத்திரமாக உருவெடுத்திருக்கும் அண்ணாமலையின் வீறுமிகு பேச்சு இதோ.

No comments: