!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, December 24, 2005

தவமாய் தவமிருந்து - திரை விமர்சனம்

சேரன், மீண்டும் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளார்.

இதுவரை குடும்பக் கதைகளை எடுத்தவர்கள், அதை ஒரு மேடை நாடகம்போல் ஆக்கியிருக்க, முதன்முறையாக ரத்தமும் சதையுமாக ஒரு கதையை நம் கண்முன் கொண்டு வந்திருக்கிறார் சேரன்.

சிறு அச்சகம் நடத்தும் முத்தையாவாக ராஜ்கிரண்; அவர் மனைவி சாரதாவாகச் சரண்யா; இவர்களின் இரு பிள்ளைகளாக ராமநாதன்(செந்தில்), ராமýங்கம்(சேரன்). ராமýங்கத்தின் காதý வசந்தியாகப் புதுமுகம் பத்மப்ரியா. இவர்களே முக்கிய பாத்திரங்கள்.

தான் படிக்காவிட்டாலும் தன் மகன்களைப் பெரிய படிப்புப் படிக்கவைத்து, உசந்த இடத்தில் வைத்துவிட வேண்டும் என்று அல்லும் பகலும் பாடு படுகிறார் ராஜ்கிரண். அவர்களுக்குத் திருக்குறள் சொல்ýக் கொடுத்து, அவர்கள் கேட்டதை எல்லாம் கடன்பட்டேனும் வாங்கிக் கொடுத்து, அவர்களை உல்லாசப் பயணம் அழைத்துச் சென்று பெரிய கனவாளியாக ராஜ்கிரண் திகழ்கிறார். பிள்ளைகள் வளர்கிறார்கள். மூத்த மகனுக்கு வேலை வாங்கித் தந்து, திருமணமும் செய்து வைக்கிறார். அவன், வந்தவள் சொல்கேட்டு வீட்டை விட்டுப் போய்விடுகிறான்.

இளைய மகன் சேரனோ, கல்லூரியில் உடன் படித்த பத்மப்ரியாவைக் காதýக்கிறார். அதன் விளைவாய் பத்மப்ரியா கர்ப்பமாகிவிடுகிறார். வேறு வழியில்லாமல் இருவரும் ஊரை விட்டுச் சென்னைக்கு ஓடி வருகிறார்கள். அங்கு வேலை கிடைக்காத சேரன், அல்லல் படுகிறார். அவருக்குக் குழந்தை பிறந்ததும் அப்பா வந்து பார்க்கிறார். பிறகு சேரனும் பிரியாவும் ஊருக்கே சென்று விடுகிறார்கள். அதன் பிறகு நல்ல வேலை கிடைத்த சேரன், தலையெடுக்கிறார். தன் பெற்றோரைத் தன்னுடன் வைத்துக் காப்பாற்றுகிறார். குடும்பம் மீண்டும் சேருகிறது.

இதுதான் கதை. இதை ஒரு திரைக் காவியமாகச் சேரன் உருவாக்கியிருக்கிறார். 'திரையில் ஒரு நாவல்' என்று இயக்குநர் இதைக் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானதே. தமிழின் மிகச் சிறந்த எதார்த்தவியல் திரைப்படங்களின் வரிசையில் இப்படமும் சேர்ந்திருக்கிறது.

இந்த அரிய படத்திற்காக முதýல் நாம் பாராட்ட வேண்டியவர், சேரன். அவருடைய கதைத் தேர்வு, நடிகர்களின் தேர்வு, அவர்களை அவர் இயக்கிய விதம், கதைக்காக அவர் எடுத்துக்கொண்ட நில அமைப்புகள், பின்னணிகள், வசனம், இசை, ஒளிப்பதிவு... என ஒவ்வொன்றும் மிகச் சிறப்பாக உள்ளது. இவை அனைத்திற்கும் மேலாகச் சேரனின் கனவுதான் மெய்சிýர்க்க வைக்கிறது. அப்பா என்ற உறவினை மையப்படுத்தி, படம் பார்க்கும் ஒவ்வொருவரும் தங்கள் அப்பா, அம்மாக்களை நினைத்துப் பார்க்க வைத்துள்ளதில் இயக்குநராகச் சேரன் வெற்றி பெற்றுள்ளார். நடிகராகவும் பல இடங்களில் மின்னுகிறார்.

அடுத்த பாராட்டு, ராஜ்கிரணுக்கு. பாசமுள்ள, தன் மக்களுக்காக ஆயிரம் சுமைகளைச் சிரித்தபடி சுமக்கும் மென்மையான அப்பாவாக ராஜ்கிரண் கலக்கியிருக்கிறார். இவரைப் போல் தனக்கும் ஒரு அப்பா இல்லையே என்று படம் பார்ப்பவர்களை நினைக்க வைத்திருக்கிறார். அவருக்குத் துணையாகச் சரண்யாவும் பின்னி எடுத்திருக்கிறார். கிராமத்துச் சூழ்நிலை, பேச்சு வழக்கு, பழக்க வழக்கம் அனைத்தையும் இவர்களின் அசைவுகளில் காண முடிகிறது.

நாயகி என்றாலே உடலைக் காட்டித்தான் நடிக்கவேண்டும் என்று இல்லாமல் புதுமுகம் பத்மப்ரியா, மிகவும் அமைதியாக நடித்துள்ளார். சேரனின் அண்ணனாகப் புதுமுகம் செந்தில்(ரேடியோ மிர்ச்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்), இயல்பாக நடித்துள்ளார். அவர் மனைவியாக நடித்துள்ள புதுமுகம் மீனாள், பொறாமையும் தனிக் குடித்தனம் போகும் எண்ணமும் கொண்ட மருமகளாக விளாசியிருக்கிறார். அவருடைய ஒவ்வொரு அசைவிலும் அந்தக் குணம் வெளிப்படுவதை மெச்சத்தான் வேண்டும்.

இன்னும் படத்தில் நடித்துள்ள பலரும் சிறப்பாகவே தங்கள் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். பாடல்கள் பரவாயில்லை ரகம். சேரன் எழுதிய 'என்ன பார்க்கிறாய்' என்ற பாடல், சிறப்பாக உள்ளது. இசை: சபேஷ், முரளி.

பெற்றோரைத் தவிக்கவிட்டுச் செல்லும் பிள்ளைகள், அவர்களின் கண்ணீரை உணரவேண்டும்; முதுமைக் காலத்தில் அவர்களை அன்போடும் ஆதரவோடும் அரவணைக்க வேண்டும் என்பதைப் பின்பகுதியில் வýயுறுத்தியிருக்கிறார். அது, சேரன் சொல்லும் முக்கிய செய்தி. படத்தின் நீளம் அதிகரித்த போது, எந்தப் பகுதியை வெட்டுவது என்று யோசித்த சேரன், இந்தக் காட்சிகளை வெட்டாமல் வேறு காட்சிகளை வெட்டியிருக்கிறார். இதிýருந்தே இந்தப் பகுதிக்கு அவர் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பது தெரிகிறது.

படம் கொஞ்சம் மெதுவாய் நகருகிறது, நீளம் அதிகமாய் இருக்கிறது என்று விமர்சகர்கள் கூறக் கூடும். ஆனால், இத்தகைய நல்ல படத்திற்காக இந்தச் சிறிய விஷயங்களைப் பெரிதுபடுத்தக் கூடாது. இந்தப் படத்திற்காகச் சேரனுக்கும் ராஜ்கிரணுக்கும் விருது நிச்சயம்.


நன்றி: தமிழ்சிஃபி

2 comments:

Anonymous said...

அண்ணா,
உங்க முனைவர் பட்ட ஆராய்ச்சி எந்த நிலையில் உள்ளது.

இங்கு ஐதராபாத்தில் தவமாய் தவமிருந்து பார்க்க இயலும் எனத் தோன்றவில்லை.

இந்த படம் எல்லாம் சி.டி யில் பார்க்கக் கூடாது. என்ன சொல்கிறீர்கள்?

posted by: Vaa.Manikandan

Anonymous said...

ஆம். சி.டியில் பார்க்கக் கூடாது. ஆராய்ச்சியில் நிறைய பணிகள் காத்திருக்கின்றன. அங்கு விசாகப்பட்டினத்தில் மின்னாளுமை சிறப்பாக உள்ளதாகத் தகவல். உங்களுக்கு எதுவும் தெரியுமா?

posted by: Annakannan