!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 'உதவும் உள்ளங்கள்' 75ஆவது இதழுக்கு வாழ்த்து ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, May 02, 2009

'உதவும் உள்ளங்கள்' 75ஆவது இதழுக்கு வாழ்த்து

சென்னை அம்பத்தூரிலிருந்து வெளியாகும் 'உதவும் உள்ளங்கள்' மாத இதழ், மே 2009இல் தன் 75ஆவது இதழை வெளியிடுகிறது. அதற்கு அதன் ஆசிரியர் ஆடானை சுகுமார் கேட்டுக்கொண்டதன் பேரில் நான் அனுப்பிய வாழ்த்து:

'உதவும் உள்ளங்கள்' மாத இதழ், மாணவர்களை அட்டைப்பட நாயகர்களாக வெளியிட்டு ஊக்குவிக்கிறது. மாணவ மணிகளின் ஆக்கங்களை வெளியிட்டு, புதிய படைப்பாளிகளை உருவாக்குகிறது. இந்த இதழில் பக்கத்துக்குப் பக்கம் மாணவர் மேம்பாடு குறித்த சிந்தனைகள் மிளிர்கின்றன. கல்வி, கலை, சமயம், சமூகம், இலக்கியம், அறிவியல்... எனப் பல கருப்பொருள்கள் கவனத்தை ஈர்க்கின்றன. மனிதநேயம் தொண்டு நிறுவனத்தின் நல்ல நிகழ்ச்சிகளை இந்த இதழ் ஆவணப்படுத்துகிறது. இந்த அமைப்பு நடத்தும் போட்டிகள், சிறந்த திறமைசாலிகளை அடையாளம் காண உதவுகிறது. சிறந்த அனுபவங்கள்! சான்றோர்களின் பொன்மொழிகள்! ஒவ்வொரு பெட்டிச் செய்தியும் கட்டிக் கரும்பாக இனிக்கிறது. தணியாத ஆர்வமும் சிறந்த நோக்கமும் இந்த இதழைப் பின்னிருந்து இயக்குகின்றன.

தன்னம்பிக்கை ஊட்டும் இந்த இதழ், தமிழ் மொழி நடை, மெய்ப்பு, தமிழ்ச் சொல்லாக்கம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதழின் சில பக்கங்களை மாணவர்களே தயாரிக்க வழிகாட்டலாம். 75 இதழ்களைத் தொடர்ந்து வெளிக்கொணர்ந்துள்ள ஆசிரியர் ஆடானை சுகுமாருக்கும் உடன் இயங்கும் ஆசிரியர் குழுவினருக்கும் நல்வாழ்த்துகள். புதிய விடியல் பிறக்கட்டும்! புதிய வெளிச்சம் பரவட்டும்!

No comments: