!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> திருப்பாவை - 18 | உந்து மதகளிற்றன் | ஸ்வேதா குரலில் | ஆண்டாள் | Tiruppavai - 18 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, January 02, 2021

திருப்பாவை - 18 | உந்து மதகளிற்றன் | ஸ்வேதா குரலில் | ஆண்டாள் | Tiruppavai - 18

கண்ணனுக்கு ஆண்டாள் வழங்கிய அடைமொழிகள் தனித்த அழகுடையவை. கூர்வேல் கொடுந்தொழிலன், யசோதை இளஞ்சிங்கம், கதிர்மதியம் போல்முகத்தான், ஓங்கி உலகளந்த உத்தமன், ஆழி மழைக்கண்ணா!, ஊழி முதல்வன், மாயன், மாமாயன், வடமதுரை மைந்தன், யமுனைத் துறைவன், மாவாய் பிளந்தான், மல்லரை மாட்டிய தேவாதி தேவன், முகில்வண்ணன், மனத்துக்கு இனியான், புள்ளின் வாய் கீண்டான், பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான், சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன், பங்கயக் கண்ணான், வல்லானை கொன்றான், உம்பர் கோமான்... எனப் பலவாறாகக் கண்ணனைப் பாடிய ஆண்டாள், இந்த 18ஆம் பாடலில், உந்து மதகளிற்றன், ஓடாத தோள்வலியன் என அடுத்து எடுத்துப் பாடுகிறார். எண்ணி எண்ணி மகிழத்தக்க இனிய இப்பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

No comments: