!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> Snowfall in England | இங்கிலாந்தில் பனிமழை ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, January 24, 2021

Snowfall in England | இங்கிலாந்தில் பனிமழை

இங்கிலாந்தில் இன்று பனிமழை, பட்டையைக் கிளப்பி வருகிறது. இதைப் படமெடுத்து அனுப்பியதோடு, தமிழில் வர்ணனையும் செய்துள்ளார், நண்பர் சக்தி சக்திதாசன். 

அத்துடன் சுடச்சுட ஒரு கவிதையும் படைத்து அனுப்பியுள்ளார்.

திரண்டு சூழும் கருமேகங்கள்
பொழிவதெல்லாம் மழைநீரல்ல
கனமாய்ப் வெள்ளைத் துகள்களாய்
கம்பளமாய் விரியுது பனிப்பாயது
சோபையிழந்த குளிர்காலச் செடிகளில்
சோபனமளிக்கும் வெள்ளைப் பூக்களாய்
சேருமந்த பனித்துகள்கள் எமக்குச்
சொல்லும் கதைகள் பற்பலவே!
இயற்கையன்னை தீட்டுமிந்த
ஈடில்லா வனப்பு ஓவியங்களனைத்தும்
இதயத்தின் ஓரங்களை ஈரமாக்கிடும்
சொற்களிலடங்கா இகத்தின் அதிசயம்
சொல்லிடத் துடிக்கும் ஆனந்த ஆர்வம்
மெல்லெனப் பொழியும் பனிமழை
மேகத்தின் உணர்வுகள் குளிர்ந்திடலே!
இயற்கையின் அதிசயங்களை ஆராதித்து
இனியேனும் இயற்கையைப் பாதுகாப்போம்!

பனியில் நனைந்தபடியே கவிதையைப் பருகுங்கள்.

No comments: