!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> இலைப் பந்தல் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, June 13, 2020

இலைப் பந்தல்

குளிர்த்தென்றல் தவழும்

குயில்சந்தம் கமழும்

இலைப்பந்தல் விரிக்கும்

ஏகாந்தம் சிரிக்கும்

ஒளிவண்ணம் குழைக்கும்

ஒய்யாரம் தழைக்கும்

பூவுலகு புரக்கும்

புதுக்காதல் பிறக்கும்



பழம்கொண்டு பழகும்

பசிதீர்த்து வருடும்

கிளைமீது கூடும்

கிளியூஞ்சல் ஆடும்

களிமதுரம் சுழற்றும்

ககனம்கண் சிமிட்டும்

ஒருகோடி உயிர்க்கும்

உயிர்கோடி உவக்கும்



கணம்தோறும் நடனம்

கனிந்தாழும் மௌனம்

விதைதோறும் காடு

விடையுண்டு தேடு

மலர்தோறும் வண்டு

திசைதோறும் தொண்டு

இன்னும் என்ன அச்சம்

இதோ புது வெளிச்சம்



https://www.vallamai.com/?p=97778



 


No comments: