!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> காகத்தின் இரவுப் பணி | Crow on night duty ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, June 16, 2020

காகத்தின் இரவுப் பணி | Crow on night duty

பறவைகள் இரவில் எப்படித் தூங்கும் என்பது என் நீண்டநாள் வினா. பறவை உறங்கி நான் பார்த்ததில்லை. இன்று தற்செயலாக, இரவு எட்டு மணிக்கு மின்சார வடத்தின் மீது இரு காகங்கள் உட்கார்ந்திருப்பதைக் கண்டேன். அவற்றுள் ஒன்று, மும்முரமாக வேலை செய்துகொண்டிருந்தது.



அவை எங்கள் வீட்டுக் கிறித்துமஸ் மரத்தில் ஏழடுக்குக் கூட்டினைக் கட்டியுள்ளன (உலக அதிசயமா என்று தெரியவில்லை). அந்த ஏழாவது கூடு, சற்று பெரிது. இன்னும் கட்டி முடியவில்லை. அதற்காக ஏதோ ஒரு கம்பியை அலகால் வளைத்துக்கொண்டிருந்தது காகம். இரவிலும் காகம் தன் வீட்டுக்காக வேலை செய்துகொண்டிருந்தது கண்டு வியந்தேன். அது ஆண் காகமாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.



 


No comments: