!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> Cat vs Cat | பூனைச் சண்டை ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, September 04, 2020

Cat vs Cat | பூனைச் சண்டை

முதல் பூனை என்ன செய்ததோ தெரியவில்லை. இரண்டாவது பூனை அதை விரட்டியது. முதல் பூனை, வேப்ப மரத்தில் ஏறிவிட, இரண்டாவது பூனையும் ஏறியது. எங்கள் ஜன்னலுக்கு எதிரே இரண்டு பூனைகளும் ஏறி நின்றன. கர் புர்ரென்று முறைத்து உறுமிச் சண்டையிட்டன. இரண்டும் பெரிய பூனைகள். இவையிரண்டும் மரத்தில் ஏறி நிற்பதைப் பார்த்து, நான்கைந்து காக்கைகள் கூடிவிட்டன. இரண்டாவது பூனை கீழே இறங்கி, மரத்தடியிலேயே காத்திருந்தது. முதல் பூனை தயங்கித் தயங்கி இறங்காமலேயே நின்றது. பிறகு நாங்கள் குரல் கொடுத்ததும் அது அவசரமாக இறங்கியது. காத்திருந்த பூனை, மீண்டும் விரட்டத் தொடங்கியது.



 

No comments: