!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> குயிலும் தையல் சிட்டும் | Cuckoo and a Tailorbird ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, September 13, 2020

குயிலும் தையல் சிட்டும் | Cuckoo and a Tailorbird

மழை ஓய்ந்த குளிர் ஞாயிறு. இன்று ஜன்னல் எதிரே ஒரு கருங்குயில் நெடுநேரம் தரிசனம் தந்தது. வேப்பிலைகள், மழைநீரை ஏந்தி நிற்க, பல்வேறு பறவைகளும் குரல் கொடுக்க, தனிமைத் தவத்தில் இருந்தது இந்தக் குயில். இந்தப் பதிவின் இறுதியில் குயில் எதிரே ஒரு தையல் சிட்டு வந்து அமர்ந்தது. அதன் வாயில் உணவைக் கவ்வியபடி, சற்றே உலாவிப் பறந்தது. இந்த மழைக்காலம், மனத்திற்கு இனிமை தருகின்றது.



 

No comments: