!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கொலு 2020: ஐஷ்வர்யா அகத்திலிருந்து | Kolu from Aishwarya's residence ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, October 24, 2020

கொலு 2020: ஐஷ்வர்யா அகத்திலிருந்து | Kolu from Aishwarya's residence

சென்னை, மேற்கு மாம்பலத்தில் வசிக்கும், ஐந்தாம் வகுப்பு மாணவி ஐஷ்வர்யா, தங்கள் வீட்டுக் கொலுவை நமக்கு நயமுற, அழகுற எடுத்துரைக்கிறார்.  பொம்மைகளை நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியது மட்டுமின்றி, சில பொம்மைகளைத் தாமே உருவாக்கியும் இருக்கிறார். பெருமாள் ஊர்வலம், தசாவதாரம், கல்யாணம், செட்டியார், ஐயப்பன், வீடு, பூங்கா.. என அணி அணியாகப் பொம்மைகள், இந்தக் கொலுவை அலங்கரிக்கின்றன. 30 ஆண்டுகளுக்கு முந்தைய பொம்மைகளையும் பாரம்பரியமாக வைத்து வருகிறார்கள். இந்தப் பதிவின் இறுதியில் இனிய பாடலையும் பாடி மகிழ்விக்கிறார். விழிக்கும் செவிக்கும் விருந்து படைக்கும் குமாரி ஐஷ்வர்யாவும் அவர் குடும்பத்தினரும், அன்னையின் அருளால் சகல ஐஸ்வர்யங்களையும் பெறுக! பொன்மழை எந்நாளும் பொழிக!

No comments: