!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> சரவணா ஸ்டோரில் சாயி இல்லம் | Shirdi Saibaba in Super Saravana Stores ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, October 03, 2020

சரவணா ஸ்டோரில் சாயி இல்லம் | Shirdi Saibaba in Super Saravana Stores

சென்னை, குரோம்பேட்டையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோரின் வாயிலில் சீரடி சாயிபாபாவின் இல்லம், தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. அதன் உள்ளே சாயிபாபாவின் அருள் திகழும் திருவதனம், நேரில் காண்பது போலவே அமைந்துள்ளது. இன்று தற்செயலாக அந்தப் பேரங்காடிக்குச் சென்றபோது இதைக் கண்ணுற்றோம்.



சீரடி சாயிபாபாவின் அமுத மொழிகள் பலவற்றையும் அங்கே காட்சிக்கு வைத்து, சாயி அன்பர்களின் இல்லங்களில் மகிழ்ச்சி பெருகட்டும் என வேண்டியுள்ளார்கள்.
சூப்பர் சரவணா ஸ்டோருக்கும் வாடிக்கையாளர்களுக்குமான பந்தம், இறைவன் அருளால் நிகழ்ந்தது. இணையற்ற அன்பால் மலர்ந்தது என எழுதியுள்ளார்கள். இந்த வாசகம், வழக்கமான வியாபாரம் என்ற நிலையிலிருந்து, நெருக்கமான உறவாக வாடிக்கையாளர்களை மாற்றும் வலிமை உடையது.



சாயிபாபா கோவிலுக்குப் போய் நீண்ட காலமாகிறது. விரைவில் அங்கே போக வேண்டும் என நேற்றுதான் என் மனைவி என்னிடம் கூறினார். இன்று சாயிபாபாவே நாங்கள் சென்ற கடைக்கு வந்து தரிசனம் தந்துவிட்டார்.



அந்த அழகிய சாயி இல்லத்தை இங்கே காணுங்கள்.



 

No comments: