!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ஆங்கிலத்தில் எழுதுவது ஏன்? - ஜெயந்தி சங்கர் நேர்காணல் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, October 21, 2020

ஆங்கிலத்தில் எழுதுவது ஏன்? - ஜெயந்தி சங்கர் நேர்காணல்

இனி நான் தமிழில் எழுதப் போவதில்லை. ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப் போகிறேன் என அறிவித்த சிங்கப்பூர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கரின் Dangling Gandhi என்ற நூல் 2019இல் வெளியானது. அது 2020ஆம் ஆண்டுக்கான சர்வதேச புத்தக விருதினை அமெரிக்காவில் வென்றதோடு (International book award by American Book Fest) மேலும் பல்வேறு சர்வதேச விருதுகளையும் (Literary Titan Silver book award by USA based awarding body Literary Titan) வென்றது. முதல் புத்தகத்திலேயே சர்வதேச கவனத்தை ஈர்த்த ஜெயந்தி சங்கரின் Misplaced Heads என்ற ஆங்கில நாவல், 2020ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது. 

இந்த நேர்காணலில் ஜெயந்தி சங்கர், ஆங்கிலத்தில் எழுதுவதற்கான காரணம், தமிழ் எழுத்துலகிற்கும் ஆங்கில எழுத்துலகிற்குமான வேறுபாடு, இந்த இரண்டு மொழிகள் தரும் வசதி, சுதந்திரம், இந்த மொழிகளில் உள்ள புத்தகச் சந்தை, வாசகப் பரப்பு உள்ளிட்ட பலவற்றையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். 

விருதுகளில் உள்ள வெளிப்படைத்தன்மை, புதிய வாசகர்கள் ஆங்கிலத்தில் அதிகம் இருப்பது, ஆங்கிலத்தின் முன்னணிப் பதிப்பாளர்கள், ஆங்கில எழுத்துலகில் உள்ள இலக்கிய முகவர்கள் (Literary Agents) எனப் பலவற்றையும் நமக்கு அறியத் தருகிறார். தமிழிலும் மிகச் சிறப்பாக எழுதுகிறார்கள் எனக் குறிப்பிடும் இவர், லக்ஷ்மி சரவணக்குமாரின் சிறுகதைகளைச் சிலாகிக்கிறார்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த நேர்காணலைப் பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

No comments: