!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> தாழைக் கோழி | Common Moorhen ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, August 15, 2020

தாழைக் கோழி | Common Moorhen

Saw this red nosed bird today morning, for the first time. This is called Common Moorhen.

இன்று காலை, இந்தப் பறவையைக் கண்டேன். இதன் பெயர், தாழைக் கோழி. ஆங்கிலத்தில் Common Moorhen என்று அழைக்கப்படுகிறது. இது நீர்க்கோழி வகையான Rallidae குடும்பத்தைச் சார்ந்தது. இது உலகம் முழுவதும் பரவி காணப்படுகிறது.

தண்ணீரில் நீந்தும்போது வாத்துப் போலவும் தரையில் திரியும் போது கானான் கோழி போலவும் தோற்றம் தருவது. சிலேட் சாம்பல் நிற உடலைக் கொண்ட இதனை வாலடி வெள்ளையாக இருப்பது கொண்டு அடையாளம் காணலாம்.

தமிழகம் எங்கும் பரவலாகக் காணப்படும் நீர்க்கோழி இனம் இது ஒன்றே. ஆணும் பெண்ணும் இணையாக நீர்ப்பரப்பின் மீது வாலை அசைத்தபடி வாத்தைப் போல நீந்தியவாறு தாவர விதைகள், நத்தை, தவளை, சிறு மீன் ஆகியவற்றைத் தேடித்தின்னும், கரையோரத்தில் உள்ள நாணல், தாழைப் புதர்களை விட்டு தண்ணீரில் நெடுந்தொலைவு நீந்திச் செல்லும் பழக்கம் முற்படும்போது சற்று நேரம் இறக்கை அடித்துப் பின் எழுந்து பறக்கும். பறக்கும் திறமை குறைந்தது எனினும் இடம் பெயர நேரும் போது உயர்ந்த மலைகளையும் கடந்து பறந்து செல்லும். நீரில் மூழ்கி மறைந்தபடி ஆபத்திலிருந்து தப்பிக்கவும் முயலும். க்க்ரீக் க்ரெக் ரெக் ரெக் என இனப்பெருக்க காலத்தில் குரல் கொடுக்கக் கேட்கலாம்.

No comments: