!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> மூலிகை வளர்க்கும் ஆட்டோ ஓட்டுநர் | 'Herbal' Auto driver ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, August 29, 2020

மூலிகை வளர்க்கும் ஆட்டோ ஓட்டுநர் | 'Herbal' Auto driver

சென்னை, குரோம்பேட்டையில் சாலையோரம் ஓர் ஆட்டோ நின்றிருந்தது. பின்னிருக்கையில் ஆட்டோ ஓட்டுநர் சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபட்டிருந்தார். அவர் எதிரே தூதுவளைக் கொடி ஒரு குவியலாகக் கிடந்தது. கத்திரிக்கோலைக் கொண்டு, அதன் இலைகளை மட்டும் தனியே வெட்டி எடுத்துக்கொண்டிருந்தார்.



அவர் பெயர் பரமசிவம். தன் வீட்டில், பிரண்டை, தூதுவளை, முடக்கத்தான், முசுமுசுக்கை, முருங்கை, மணத்தக்காளி ஆகியவற்றை வளர்த்து, வேண்டுவோருக்கு அவர்களின் வீட்டில் கொண்டு போய்க் கொடுக்கிறார். ஆட்டோ ஓட்டுவதோடு இந்த மூலிகை வளர்ப்பைத் தனித் தொழிலாகச் செய்துகொண்டிருக்கிறார். வேண்டுவோர், இவரை அணுகலாம் (பரமசிவம், ஆட்டோ ஓட்டுநர், செல்பேசி எண் - 9444473801). அவருடன் ஓர் உரையாடல்.



 

No comments: